ஈரோடு, ஆக. 9- மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச் சார்யா மறைவையடுத்து, மார்க் சிஸ்ட் கட்சியினர் பல்வேறு இடங்க ளில் இரங்கல் கூட்டம் நடத்தி அன்புத் தோழனுக்கு பிரியாவிடை கொடுத்த னர். ஈரோடு மாவட்டம் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுரா மன் தலைமை ஏற்றார். இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரி முத்து, ஆர்.கோமதி, சி.பரமசிவம், ஆர்.விஜயராகவன், எஸ்.சுப்ரமணி யன் மற்றும் கே.துரைராஜ், கே.ராஜ்கு மார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். சேலம் இதேபோன்று, புத்ததேவ் பட்டாச் சார்யா-வின் மறைவைத் தொடர்ந்து, சிபிஎம் சேலம் மாவட்டக்குழு அலுவல கத்தில் வெள்ளியன்று அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முக ராஜா, மாநகரச் செயலாளர்கள் எம்.கன கராஜ், என்.பிரவீன்குமார், ஒன்றியச் செயலாளர் கே.ராஜாத்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.சந்திரன், பி,பால கிருஷ்ணன், டி.பரமேஸ்வரி, ஜி.கவிதா, எஸ்.பவித்ரன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.