districts

img

சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிவு

கோவை, ஏப்.11- கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8¾ அடியாக குறைந்து விட்டது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கோவை மாநகர பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வரு கிறது. 50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் 100 எம்எல்டி (10 கோடி லிட்டர்) தண்ணீர் எடுக்க முடியும். இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி யில் மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் திங்களன்று காலை 8 மணி நிலவரப்படி 8¾ அடியாக இருந்தது. அணை யிலிருந்து குடிநீருக்கு 40 எம்எல்டி (4 கோடி லிட்டர்) எடுக்கப்பட்டது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகை யில், சிறுவாணி அணையில் உள்ள நீரேற்று நிலையத்தில் தண்ணீரை உறிஞ்சி எடுக்க 4 வால்வுகள் உள்ளன. அதில்  3 வால்வுகள் கீழ்நோக்கியும், 4 ஆவது வால்வு மேல்நோக்கி யும் இருக்கும். அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டதால் 3  ஆவது வால்வு வெளியே தெரிகிறது. தற்போது அணையி லிருந்து 40 எம்எல்டி தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டது.  அதில் மாநகர பகுதிக்கு 36 எம்எல்டி  வழங்கப்பட்டது. இதே  அளவு தண்ணீரை எடுத்தால் அடுத்த மாதம் இறுதி வரை தண்ணீர் எடுக்க முடியும் என்று நம்புகிறோம், என்றனர்.