கோவை, ஜூன் 17- மாணவர்களின் பெற்றோர் களை தொடர்பு கொண்டு ஸ்கா லர்ஷிப் பெற்று தருவதாக சொல்லி ரூ. 7 லட்சம் நூதன மோசடி செய்த சம்பவத்தில், நாமக்கல்லை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் வே.பால கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவையில் ஸ்கா லர்ஷிப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி நடைபெறுவதாக குற்றப்பிரிவு காவல்துறையில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மோசடி கும்பல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாண வர்களின் பெற்றோர்களின் விவரங் களை ஆன்லைன் தளம் மூலமாக சேகரித்துள்ளனர். பின்னர், அவர் களை செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டுள் ளனர். அப்போது உங்களது மகன், மகளுக்கு அரசு மூலமாக ஸ்காலர் ஷிப் பணம் கிடைத்துள்ளது என அரசு அலுவலர்கள் போல் பேசி உள்ளனர். மேலும், அந்த கும்பல் வாட்ஸ் அப் ப்ரோபைலில் தமிழ்நாடு அரசின் இலட்சினையை வைத்துள் ளனர். தொடர்ந்து அவர்கள் வாட்ஸ் அப்பில் கியூ.ஆர்.கோடு அனுப்பி உங்களுக்கு ஸ்காலர்ஷிப் பணம் அனுப்பி வைக்கப்பட்டதாக போட்டோ எடுத்து அனுப்பி உள் ளனர். இதனை உண்மை என நம்பி ஸ்காலர்ஷிப் பணம் பெறுவதற் காக கியூஆர் கோடை அழுத்திய வுடன் அவர்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணமும் அடை யாளம் தெரியாத நபர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப் பட்டது.
இதே போல் கோவையில் ஏழு பேரிடம் ரூ.7 லட்சத்திற்கும் மேல் பணம் மோசடி நடைபெற் றுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய் வாளர் அருண் தலைமையில் தனிப் படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இதேபோல் தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்டோர் ஏமாற்றப் பட்டது தெரிய வந்தது. மேற் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், எவ்வளவு லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர் என்பது தெரியவரும். மேலும், மோசடி ஆசாமிகள் பேசிய செல் போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசார் 5 பேரை கைது செய்தனர்.அவர்களி டமிருந்து 44 செல்போன்கள், ஏழு வங்கி புத்தகம், 28 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏழை மக்களை குறிவைத்து இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இதே போல் லாட்டரி மோசடி, ரிவார்டு பெற்று தருவதாக மோசடி, செல் போன் டவர் அமைக்க பணம் தருவ தாக மோசடி என பல்வேறு வகை களில் மோசடி நடைபெற்று வரு கிறது. எனவே, பொதுமக்கள் விழிப் புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற மோசடி நபர் களிடம் ஏமாற வேண்டாம் என தெரி வித்தார்.