திருப்பூர், ஜூலை 12- குடும்ப அட்டைதாரர்களுக்கு விநி யோகிக்க தேவையான அளவு ரேசன் பொருட்களை ஒதுக்கீடு செய்ய வேண் டும் என வலியுறுத்தி, சிஐடியு கூட்டுறவுப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். நியாய விலைக்கடைகளுக்கு தனித் துறை அமைக்க வேண்டும். அனைத்து நியாய விலைக்கடை ஊழியர்களுக் கும் கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். சமூக ஆர்வலர் என்ற பெய ரில் போலியான புகார்களை கொடுத்து வரும் நபர்கள் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும். நியாய விலைக் கடை அட்டைதாரர்கள் அனைவருக் கும் விநியோகிக்க தேவையான அளவு ரேசன் பொருட்களை, அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் ஒதுக்கிட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தி, சிஐடியு கூட்டுறவுப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட் டத் தலைவர் பி.கௌதமன் தலைமை வகித்தார். சம்மேளன மாநிலத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றி னார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் நிசார் அஹமத் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றி னார். முடிவில், மாவட்டச் செயலாளர் கே.மகேந்திரன் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மண்டல இணைப்பதிவாளர், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.