districts

img

பொலிவிழந்து வரும் வெற்றிலைக் கொடி விவசாயம்

உடுமலை, மடத்துக்குளம் மற்றும் கரைவழிப் பகுதிகளில் குறிப்பாக கணியூர் பகுதிகளில் வெத்திலைக் கொடி விவசாயம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கணியூரில் கடந்த  நூற்றாண்டுக்கு முன்பு வரையி லும் வெத்திலைக் கொடியில் சக்கரை வெத்திலை, கற்பூர வெத்திலை, கம்மாறு வெத்திலை பயிர் செய்யப்பட்டு வந்தது. இதில் கற்பூர வெத் திலை என்பது  கற்பூர மணத் துடன் சற்று காரம் அதிகமாக  இருக்கும். கம்மாறு வெத்திலை  என்பது காரத்திற்கு பஞ்சமில்லா மல் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மென்று தின்னக் கூடியது. வயிற்றுப் பொருமல், அஜீரணக் கோளாறுகளை நீக்கக் கூடியது. சாப்பிட்டவுடன் நம் முன்னோர்கள் வெற்றிலை போடச் சொன்னதற்கும் இதுவே  காரணம். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சுவாசப் பிரச்ச னைகள், இருமல், சளி போன்ற வற்றிற்கும் வெத்திலை ஒரு மருந்தாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர். கிராமப் பகுதிகளில் முதலில் திருமண அழைப்பு மற்றும் நல்ல காரியங்கள் அனைத்திற்கும் வெத்திலை, பாக்கு வைத்தே  விருந்துக்கு அழைப்பர். கட்டா யம் விருந்து முடிந்தவுடன் ஒரு தட்டில் வெத்திலை, பாக்கு வைத்து விடுவர். அனைவரும் எடுத்துக்கொள்ளும் வகையில்  நிரம்ப நிரம்ப வெத்திலை பாக்கு சுண்ணாம்புடன் ஒரு தட்டில் வைத்து வழங்குவர். கற்பூர  வெத்திலை, சக்கரை வெத்திலை தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளம் பெருக நல்ல மருந்தாகவும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர். வெத் திலை போட்டு நன்றாக நாக்கு சிவந்தால் அஜீரணம் நீங்கு வதும்,

இதனால் அன்பு, பாசம் அதிகமாகும் என்று  வட்டார வழக்கில் கூறுவதும் உண்டு.  இன்று கரைவழியில் முப்போ கம் நெல் விளைச்சலும் இல்லை. வெத்திலைக் கொடி விவசாயமும் இல்லை. கணியூர் வெத்திலை என்பது  கோவை, மதுரை  போன்ற  பெரிய பெரிய ஊர்களிலிருந்து வந்து கணியூரில் தங்கி  வாங்கிச் சென்ற காலங்களும் உண்டு.  மேலும் கணியூர் பகுதியில் விளைந்த சக்கரை வெத்திலை, கற்பூர வெத்திலை வெளி மாநிலங்களுக்கும், மேலை நாடு களுக்கும் ஏற்றுமதி ஆனதாகவும் இங்கிருக்கும் பெரியோர்கள் கூறுகின்றனர். சுமார் 40, 50 வருடங்களுக்கு முன்பு வரை கணியூர் முதன் மைச் சாலையில் தற்போதிருக் கும் ஐஒபி வங்கி வளாகத்தில்  உள்ள (பசுமடத்தில்) வெத்திலை வாங்குவதற்காக நீண்ட வரிசை யில் நின்று வாங்கிச் சென்றுள் ளனர். இதனால் ஒரு சில நாட்க ளில் பெரிய அளவிற்கு போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தைப் வேடிக்கை பார்த்ததாகவும் தற்போது வயது முதிர்ந்த பெருமக்கள் தெரி விக்கின்றனர். கரைவழி நாட்டில் நெல் மட்டுமல்லாது வெத்திலைக் கொடி விவசாயமும் சிறப்பாக இருந்ததையும் தற்போது அது மிகவும் அருகி வருவதையும்  நாம் நம் கண் முன்னே பார்த்து வருகின்றோம். கரைவழிநாட்டு விவசாயம் குறித்தும் கரை வழி நாடு குறித்தும்  உடுமலை வர லாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர்ந்து  ஆய்வு செய்து வரு கின்றனர். (ந.நி)