districts

img

மிரட்டி பணம் பறித்த வனத்துறையினர் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.1- கல்வராயன் மலைப்பகுதி மக் களை மிரட்டி பணம் பறித்த வனத் துறை அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தமிழக  அரசு வழங்கிய இலவச மரக்கன்று களை, பணம் வாங்கி விற்பனை செய்த வன அதிகாரிகள் திரு மூர்த்தி, ராஜா ஆகியோர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். மலை வாழ் மக்கள் தங்களது அனுபவ நிலத்தில் சாகுபடி செய்த செடி களை பிடுங்கி எரிந்து, பணம் பறித்த  கல்வராயன் வன அதிகாரி உள் ளிட்ட வனத்துறையினர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். அரசு  வழங்கும் மரம், செடி பராமரிப்பு  செலவுத்தொகையை, வனத்துறை யினர் கொடுக்காமல் ஏமாற்றி யுள்ளனர். தமிழக அரசு இதன் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் வராயன் மலைக்கு தனி வன அதி காரியை நியமனம் செய்ய வேண் டும். வனத்துறைக்கு ஆதரவாக புறம்போக்கு நிலங்களில் வெட்டி  கடத்திய மரங்களுக்கு, சட்டவி ரோதமாக அனுமதி வழங்கிய கல்வ ராயன் மலை கிராம நிர்வாக அலு வலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருமந்துறை பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், மலைவாழ் மக்கள் சங்க  கல்வராயன் மலை கமிட்டி செய லாளர் வி.சின்னமணி தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இரா.சர வணன், மாநிலப் பொருளாளர் எ. பொன்னுசாமி, மாநிலக்குழு உறுப் பினர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மலை கமிட்டி தலைவர் ஜி.தமிழரசன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குண சேகரன், மலை கமிட்டி செயலா ளர் பாக்கியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.