கோவை - ஜபல்பூர் சிறப்பு ரயில் இயக்கம் நீட்டிப்பு
கோவை, அக்.7- கோவையிலிருந்து மத்தியபிரதேச மாநிலம், ஜபல் பூருக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் சேவை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை - ஜபல்பூர் இடையே கடந்த சில மாதங்களாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் முதல் வாரம் வரை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ரயில் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை - ஜபல்பூர் இடையே இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 02197) அக்.10 ஆம் தேதியன்று முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வரை, வாரந்தோறும் திங்கட் கிழமைகளில் மாலை 3.25 மணிக்கு கோவையில் புறப்பட்டு புதன்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு ஜபல்பூரைச் சென்ற டையும். இதேபோல, அக்.7 ஆம் தேதி முதல் டிச.30 ஆம் தேதி வரை ஜபல்பூரிலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 02198) ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது, பாலக்காடு, ஷோரனூர், மங்களூரு, இட்டாரசி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளி கொலை: 3 பேர் கைது
ஈரோடு, அக்.7- ஈரோட்டில் மீன்பிடித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் தாத்தா, மகன், பேரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், எல்லப்பாளையம் தொட்டம் பட்டியைச் சோ்ந்தவர் கணேசன் (45). மீன் பிடித் தொழி லாளியான இவரது வீட்டுக்கு அருகில், இவரது உறவினர் களான முத்துபாண்டி (எ) முத்துசாமி (85), அவரது மகன் மாதேஸ்வரன் (50) மற்றும் பேரன் சித்தீஸ் (28) ஆகி யோர் வசித்து வருகின்றனர். கணேசனுக்கும், முத்துசாமி குடும்பத்தினருக்கும் இடையே 4 சென்ட் நில தொடா்பாக நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர் பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், திங்களன்று இரவு மது போதையில் இருந்த கணேசன், முத்துசாமி குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, முத்துசாமி குடும்பத் தினர் அரிவாளால் கணேசனை வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவாகினர். இது தொடர்பாக ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துசாமியின் மகன் மாதேஸ்வரனை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து விசாரணை நடத் தினர். இதில் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த முத்துசாமி, சித்தீஸ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் நூதன மோசடி
ஈரோடு, அக்.7- ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் நூதன முறையில் ரூ.2.46 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனா். ஈரோடு மாநகராட்சி பகுதியை சோ்ந்த ஓய்வுபெற்ற ஆசிரி யையின் கைப்பேசிக்கு கடந்த மாதம் 15ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மின் கட்டணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தாததால் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவா் ஏற்கனவே மின்கட்டணத்தைச் செலுத்தி விட்ட தால் குறுந்தகவல் வந்த தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது தொலை பேசியில் பேசிய நபா், வீட்டின் மின் இணைப்பைத் துண்டிக் காமல் இருக்க வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படும் லிங்க் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து அபராதத் தொகையை மட்டும் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவா் செயலியை பதிவிறக்கம் செய்த போது ரூ.10 அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துவதற்காக வங்கியின் விவரத்தையும், கைப்பேசிக்கு வந்த ஓடிபி எண்ணையும் அவா் பகிர்ந்துள்ளார். இதற்குப் பிறகு அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 2.46 லட்சம் பிடித்தம் செய்யப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து அவர் ஈரோடு சைபா் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் சைபா் கிரைம் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து மோசடி செய்த நபரைத் தேடி வரு கின்றனர். இதுபோன்று கைப்பேசிக்கு வரும் லிங்க்கை அழுத்தி உள்ளே செல்ல வேண்டாம் என்றும், உறுதிபடுத்தப்படாத ஆன்லைன் செயலியில் வங்கியின் விவரத்தைப் பகிர வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
காந்தியடிகள் பிறந்த தினம்: மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி
தருமபுரி, அக்.7- தமிழ் வளர்ச்சி துறை சார்பில் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் வருகிற 12ஆம் தேதி தருமபுரியில் நடை பெற உள்ளது. இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ் வளர்ச்சி துறையின் மானிய கோரிக்கையில் அறிவித்துள்ள படி நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வரு கிறது. இதன்படி தருமபுரி மாவட்டத்தில் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டி வருகிற 12ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப் படும். மேலும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு சிறப்பு பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு 4 தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு 6 தலைப்புகளிலும் இந்த பேச்சு போட்டிகள் நடத்தப்படும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி கல்வி இயக்குனர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் அனுமதி பெற்று பேச்சு போட்டி யில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி
ஈரோடு, அக். 7- இந்திய அஞ்சல் துறை தபால் தலை சேகரிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி நடத்துகிறது. ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விடுத் துள்ள செய்திக்குறிப்பில், அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு பள்ளிகள், அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் இதில் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் பள்ளிகள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அக் டோபர் 1 முதல் 31ஆம் தேதிக்குள் ஏதேனும் ஒரு தேதியில் போட்டி நடத்த வேண்டும். அதில் சிறந்த 5 படைப்பைத் தேர்ந் தெடுத்து அதை ஸ்கேன் செய்து www.innovativeindia.mygov.in/akamstampdesign என்ற போர்டலில் பதிவேற்ற வேண்டும். ஒவ்வொரு மாநி லங்களில் இருந்தும் 5 சிறந்த படைப்புகள் தேர்ந்தெ டுக்கப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர் களுக்கு வரைவதற்கான தாள்களை அஞ்சல் துறை வழங்கும். இந்த தாள்களில் கிரேயான்கள், பென்சில் வண்ணங்கள், நீர் வண்ணங் கள், அக்ரலிக் வண்ணங்கள் மூலம் AKAM என்னும் தலைப் பில் வரைய வேண்டும். AKAM என்னும் தலைப் பானது freedom struggle, ideas@75, actions@75 and achivement@75 என்ற ஐந்து உப தலைப்புகளை கொண்டது. இப்போட்டி யில் கலந்து கொள்ளும் பள்ளிகள் எத்தனை மாண வர்கள் பங்கேற்கிறார்கள் என்னும் விபரத்தை அஞ்சல் துறைக்கு தெரிவிக்க வேண் டும் என்று கூறியுள்ளார்.
தனியார் வங்கியின் தொடர் தொல்லை குழந்தையுடன் தாய் தலைமறைவு
ஈரோடு, அக்.7- அந்தியூர் அருகே தனியார் வங்கியில் கால்நடை கடன் பெற்ற குடும்ப தலைவி, கடன் தொல்லையால் தனது குழந்தையுடன் தலைமறைவாகி உள்ளார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், மாத்தூர் அருகே ஐச்சிமார் தோட்டம் பகுதி யில் வசித்து வருபவர் மணி. இவர் பெருந் துறையில் உள்ள இன்ப்ரா டெக்ஸ் கம்பெனி யில் டெய்லராக வேலை செய்து வருகிறார். இவருக்கு செல்வி (32) என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் மணி அந்தியூரில் உள்ள ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் என்ற தனியார் வங்கி யில் கால்நடை கடன் ரூ.ஒரு லட்சம் வாங்கி யுள்ளார். இதற்கு மாதத்தவணையாக ரூ.4 ஆயிரத்து 565 தவணை செலுத்தி வந்துள் ளார். இதற்கிடையே கடந்த செப்.30 ஆம் தேதி வங்கி மேலாளர், பிரதீப்குமார் என்பவருடன் மணியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரது மனைவியிடம் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்றும், இல்லா விட்டால் கையெழுத்து போட்டு கொடுத்து கடனை முடித்துக்கொள்ள நிர்பந்தம் செய் துள்ளனர். இதுகுறித்து செல்வி மணியை போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அதற்கு நீ கடன் வாங்கியதால்தான் இவ்வளவு பிரச்சனை என்று மணி தனது மனைவியிடம் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மணி வீட்டிற்கு சென்றபோது தனது மனைவி, பெண் குழந்தை மதுசுபாஷினி (3)-யைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்காததால், மணி வெள்ளித் திருப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவர் மற்றும் மாமானர் மீது வழக்கு
தருமபுரி, அக்.7- தருமபுரி மாவட்டம், மகேந்திர மங்கலம் அருகே கண்டக பைல் கிராமத்தை சேர்ந்த முத்து (22) என்ற வாலிபரும் அதே பகுதியை சேர்ந்த பிரியா(16) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி கண்டகபைல் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் பெற்றோர் அனுமதி யின்றி திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருந்த போது திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தருமபுரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குழந்தை திருமணம் செய்ததை கண்டறிந்த மருத்துவர்கள் சமூக நலத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மகளிர் ஊர் நல அலுவலர் சாந்தி, குழந்தை திருமண தடுப்பு சட்டப்படி முத்து மீது நடவடிக்கை எடுக்கு மாறு மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், கடந்த 15 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து கணவர் முத்து மற்றும் முத்துவின் தந்தை சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வரு கின்றனர்.
விவேகானந்தா சேவாலயம் சம்பவம்: சமூக நலத்துறை அமைச்சர் ஆய்வு
திருப்பூர், அக். 7 - திருமுருகன் பூண்டி விவேகானந்தா சேவாலயத்தில் சிறு வர்கள் மூன்று பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெள்ளியன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து பூண்டியில் உள்ள தனியார் விடுதியில், சமூக நலத்துறை இயக்குநர் வளர் மதி, பொதுப்பணித் துறை செயலர், விசாரணை அதிகாரி மணி வாசன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் உள்ளிட்டோருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். காப்பகத்தில் உள்ள அடிப்படை வசதிகள், கட்டமைப்பு, விசாரணை செய்யப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட விவரங் களை அமைச்சர் கேட்டறிந்து வருகிறார்.
அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு
திருப்பூர், அக். 7 - பல்லடம் அருகே பொங்கலூா் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடைபெற் றது. பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சேமலைக்க வுண்டம்பாளையும், மசநல்லாம்பாளையம், நாச்சிபாளை யம், தாயம்பாளையம் ஆகிய பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப் பறை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தொங்குட்டிபாளையம் ஊராட்சி, பெருந்தொழுவு வாரச் சந்தையில் ரூ.21.12 லட்சத்தில் சந்தை மேம்பாட்டு பணி, ரூ.5.49 லட்சத்தில் கான்கிரீட் தளம் பணி, கரட்டுப்பாளையத் தில்ரூ.2.66 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, பெருந்தொழுவு ஊராட்சியில் ரூ.4.65 லட்சத்தில் பாதாள சாக் கடை பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் வளா்ச்சிப் பணிகளை பல்லடம் சட்டப்பே ரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தொடங்கிவைத் தார்.
திமுக நிதியுதவி
திருப்பூர், அக். 7 - விவேகானந்தா சேவாலயத்தில் உயிரிழந்த 3 சிறுவர்கள் குடும்பத்தாருக்கு திமுக சார்பில் தலா ரூ.1 லட்சம் இழப்பீடும், சிகிச்சை பெற்று வரும் 11 சிறுவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர் கீதா ஜீவன் ஆகி யோர் குழந்தைகளின் பெற்றோர், காப்பாளர்களிடம் நேரில் நிதியை வழங்கினர்.
சோளத்தட்டை ஏற்றும் போது விபத்து: தொழிலாளி பலி
திருப்பூர், அக். 7 - திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் செட்டிக்குட்டை மேட்டுவ ளவு புதுக்காலனியை சேர்ந்தவர் வண்ணாரை (55). கூலித் தொழிலாளி. இவரை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் சோளத்தட்டை லோடு ஏற்றும் பணிக்கு, வலையபா ளையம் குரைத்தோட்டம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சோளத்தட்டை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சோளத்தட்டை கட்டு மீதிருந்து தவறி விழுந்தார். இதில் அவரது கழுத்தில் அடிபட்ட நிலையில், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வண்ணாரை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்து தராத சுப்பிரமணி மீது குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இன்று பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர் முகாம்
திருப்பூர், அக். 7- திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை அக்டோபா் 8 ஆம் தேதி நடைபெறுகிறது. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை யில் நடைபெறுகிறது. இந்த முகாமில், அனைத்து குடி மைப்பொருள் தனி வட்டாட்சியா்கள், வட்டவழங்கல் அலு வலா்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளா்கள் பங்கேற்று முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடித் தீா்வுகாண உள்ளனா். இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, கைப்பேசி எண் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை கோருதல் தொடா்பான மனுக்களை அளிக்கலாம். முகாம் நடைபெறும் இடங்கள்: அவிநாசி வட்டத்தில் கூட்டப்பள்ளி, தாராபுரம் வட்டத்தில் காங்கேயம்பாளையம், காங்கயம் வட்டத்தில், கீரனூா், மடத் துக்குளம் வட்டத்தில் சா்க்கார் கண்ணாடிபுத்தூா், பல்லடம் வட்டத்தில் வே.கள்ளிப்பாளையம், திருப்பூா் வடக்கு வட்டத் தில் கணக்கம்பாளையம், திருப்பூர் தெற்கு வட்டத்தில் மங்க லம், உடுமலை வட்டத்தில் பெதப்பம்பட்டி, ஊத்துக்குளி வட்டத்தில் ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த முகாமினைப் பயன்படுத்திக் கொள்ள லாம் என்று மாவட்ட நிர்வாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி
தாராபுரம், அக் 7 - தாராபுரத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 5 லட்சம் வாங்கி மோச டியில் ஈடுபட்டதாக சாரா நர்சிங் கல்லூரி தாளாளர் ஜெய்லானி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாராபுரம் சென்னியப்பா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி. அரசு போக்குவ ரத்து கழக ஓட்டுநர். இவரது மனைவி செல்வி (48) இசைக்கல்வியில் பட்டம் பெற்றவர். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு புதிய வீட்டு வசதி வாரிய குடி யிருப்பு பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கணவர் எம்.ஜெய்லானி (70) இடம் இசை ஆசிரியர் வேலை கேட்டு அணுகியுள்ளார். அப் போது ஜெய்லானி தனக்கு அரசு உயர் அதிகாரி வரை தெரியும் எனவும், வி.கே. சசிகலாவின் கணவர் நடராஜன் எனது நண்பர், அவரிடம் கூறி இசை ஆசிரியை வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறி யுள்ளார். அதனை நம்பிய செல்வி வங்கியில் ரூ. 5 லட்சம் கடன் வாங்கி ஜெய்லாணி யின் வங்கி கணக்கில் ரூ 1லட்சமும், ரூ 4. லட்சம் ரூபாய் நேரடியாக கையில் கொடுத்துள்ளார். சிறிது காலம் கழித்து செல்வி வேலை என்ன ஆனது என்று கேட்டார். அதற்கு ஜெய்லானி கட்டாய மாக வேலை வாங்கி தருவதாக உறுதி கூறி நாட்களை கடத்தி வந்தார். இந்நி லையில் செல்வி தனக்கு வேலை இல்லையென்றால் பணத்தை திருப்பி தரும்படி கடந்த நான்கு ஆண்டு கால மாக வீட்டிற்கு பலமுறை சென்று கேட் டுள்ளார். அதற்கு ஜெயலானி பணம் தர முடியாது என மறுத்ததுடன் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கடந்த நான்கு மாதங்க ளுக்கு முன்பு செல்வி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவை தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண் டன் விசாரிக்க உத்தரவிட்டார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட காவல் ஆய் வாளர் மணிகண்டன் ஜெய்லானியை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வேலை வாங்கி தருவதாக கூறி செல்வியிடம் ரூ. 5 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட் டதுடன் கொலை மிரட்டல் விடுத்த ஜெய் லானி மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
சிபிஎம் கோரிக்கை
திருப்பூர், அக்.7- விவேகானந்தா சேவால யம் குழந்தைகள் காப்ப கத்தை அரசே ஏற்று நடத்து வதுடன், இது போல் ஆதர வற்ற குழந்தைகளை பாது காக்க மாவட்டத்திற்கு ஒரு காப்பகம் ஏற்படுத்த வேண்டும். அதில் பள்ளியும் உள்கட்டமைப்பாக இருக்க வேண்டும். அரசு உடல்நலன் பாதித்த குழந்தைகள் பெய ரில் உதவி தொகையை வங் கிகளில் வைப்புத் தொகை யாக வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அக். 10 ல் ஐ.டி.ஐ சேர்க்கை முகாம்
திருப்பூர், அக். 7- திருப்பூர் மாவட்ட அளவிலான தொழில் பழகுநர்களுக் கான சோ்க்கை முகாம் தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் திங்களன்று அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெ றுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது: பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத் தின்கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மத்திய அரசின் பொதுபயிற்சி இயக்ககம் சார்பில் திருப் பூர் அளவிலான தொழில் பழகுநர்களுக்கான சேர்க்கை முகாம் தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இந்த முகாமில், ஒன்றிய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் துறை நிறுவ னங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களில் காலிப்பணியி டங்களை நிரப்பவுள்ளனர். இதில், பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு தொழில் பழ குநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ்(என்ஏசி) வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெற்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் என்ஏசி சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கி றது. தொழில் பழகுநர்களுக்கான உதவித்தொகை தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்சிவிடி, என்சிவிடி திட்டத் தின் கீழ் தொழில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அடிப்படை பயிற்சியுடன் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ள 8, 10 , பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் இந்த முகாமில் பங்கேற்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை 99447-39810, 98947-83226, 94990-55700, 94990-55696 ஆகிய கைப் பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
திருமண மண்டபங்களில் பட்டாசு கடை வைக்க அனுமதி இல்லை
உதகை, அக். 7- திருமண மண்டபங்களில் பட்டாசு கடை வைக்க அனுமதி கிடையாது என நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வரும் அக்.24 ஆம் தேதி யன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை நடத்த விருப்பம் உள்ளவர்கள் பட்டாசு உரிமம் பெற வெடிபொருள் சட்ட விதிகள் 2008-ன் கீழ் உயர்நீதிமன்ற உத்தரவின் உள்ள நிபந்த னைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் அறிவுறுத்தியுள் ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பட்டாசு கடைகளின் மேல் மாடியில் குடியிருப்பு மற்றும் பட்டாசு இருப்பு இருத்தல் கூடாது. பட்டாசு எளிதில் தீப்பற்றும் பொருட்கள் உள்ள பகுதியில் கட்டி டங்கள், டீ கடை இருத்தல் கூடாது. பொதுமக்கள் ௯டும் இடங் களான பேருந்து நிலையம் மற்றும் பள்ளிக்௯டம் அருகில் பட்டாசு கடை அமைத்தல் கூடாது. பட்டாசு கடையின் கட்டி டத்தில் கண்டிப்பாக 2 வழிகள் இருக்க வேண்டும். அதில் அவசரகால வழி, கடையில் வெளி செல்லும் வழி இருக்க வேண்டும். பட்டாசு கடை வைக்க கூறும் இடத்திற்கு கதவு என்னுடன் கூடிய விலாசம் விண்ணப்பத்தில் இருக்க வேண்டும். திரு மண மண்டபங்கள், அரங்கங்கள், சமுதாய கூடங்கள் ஆகிய கட்டிடங்களில் பட்டாசு கடை அமைக்க கூடாது. பட்டாசு கடை உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போது பட்டாசு கடை வைக்கப்படும் இடம் காலியானதாகவும் பொருட்கள் ஏதும் இல்லாத வகையிலும் இருக்க வேண்டும். பட்டாசு கடை உரிமம் வழங்கவும் பட்டாசு கடை வைக்க அனுமதி வாங்கி தருவதாகவும் கூறி யாராவது பணம் கேட் டால் 0423-2223828, அல்லது 9789800100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்
கோவை, அக்.7- கொடநாடு கொலை, கொள்ளை வழக் கின் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஷகில் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள் ளார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த பங் களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது பல்வேறு ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை சம்பவத்தின்போது, அதனை தடுக்க முயன்ற காவலாளி கொலை செய் யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், சதீசன், திபு உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர் கள் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். இதனிடையே திமுக அரசு பொறுப்பேற்ற தும் இந்த வழக்கில் மறு விசாரணை நடந்து வருகிறது. இதற்காக 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் நேர டியாகவே விசாரணை மேற்கொண்டு வரு கிறார். இதுவரை தனிப்படையினர் ஜெயலலிதா வின் தோழி சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுக் குட்டி, சசிகலாவின் உறவினர் விவேக், கொட நாடு மேலாளர் நடராஜன், வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் உள்பட பலரிடமும் விசாரணை மேற் கொண்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கொட நாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு பிறப்பித்தார். கொடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப் பட்ட நிலையில் விசாரணை அதிகாரியாக கூடுதல் காவல் துறை இயக்குநர் ஷகில் அக்தர் என்பவரை தமிழக அரசு நியமித்துள் ளது. கொடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற் றப்பட்டு, விசாரணை அதிகாரியும் நியமிக்கப் பட்டு விட்டதால், அவர் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று உடனடியாக விசா ரணையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பவானி காவல் நிலையத்தில் டிஐஜி ஆய்வு
ஈரோடு, அக். 7- ஈரோடு மாவட்டம், பவானி காவல் நிலை யத்தில் கோவை சரக டிஐஜி எம்.எஸ்.முத்து சாமி வெள்ளியன்று ஆய்வு மேற்கொண் டார். கோவை சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, பவானி மற்றும் ஆப்பகூடல் காவல் நிலை யங்களை ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையங்களில் உள்ள அலுவலக பதிவேடு கள், வழக்கு கோப்புகள் ஆகியவைகளை ஆய்வு செய்தார். மேற்படி இரண்டு காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளரான எம்.கிருஷ்ணமூர்த்தி, காவல் உதவி ஆய் வாளர்கள் ரகுநாதன், அசோகன், மகேஷ் வரி, கோவிந்தராஜன், கெஜலட்சுமி மற்றும் இதர காவல் ஆளிநர்கள் அனைவரின் குடும்ப நலனை பற்றி விசாரித்து குறைகளையும் கேட்டறிந்தார். அலுவலக பதிவேடுகள், வழக்கு கோப்பு கள் பராமரிப்பு மற்றும் வழக்குகளின் கண்டு பிடிப்பு ஆகியவைகளை ஆய்வு செய்து வெகுவாக பாராட்டினார். மேலும், ஆன்லைன் சூதாட்டத்தால் எவருக்கேனும் பாதிப்பு ஏற் பட்டால் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என் றார். இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வி.சசிமோ கன் மற்றும் பவானி காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அமிர்த வர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.
நாமக்கலில் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நாமக்கல், அக்.7- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில், மாவட்ட அளவில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் வியாழனன்று நடை பெற்றது. பேக்கரி உள்ளிட்ட கடைகளில் பொட்டலம் இடப்படாத (பேக்கிங் செய்யப்படாத) இனிப்பு மற்றும் கார வகை திண் பண்டங்களில் காலாவதியாகும் தேதி நுகர்வோருக்கு எளி தில் தெரியும் வகையில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அவ் வாறு குறிப்பிடாத கடைகளில் ஆய்வு செய்து அபராதம் விதிக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் உள்ள திட்ட விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இணையதள முகவரியை தெரிந்து கொள்ளும் வகையில் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். நுகர்வோர் வழங்கும் கோரிக்கை மனுவினை முறையாக பரிசீலனை செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் அனைத்து வகை யான பொருட்களுக்கும் தரம் மற்றும் பயன்பாட்டிற்கான நுகர் வோர் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அர சுத்துறைகள் நடத்த வேண்டும். அரசு மற்றும் கூட்டுறவுத் துறைகளின் இ-சேவை மையங்களில் அரசினால் நிர்ணயிக் கப்பட்ட கட்டணங்கள் மட்டும் வசூலிக்கப்பட்டு வருகிறது. மின் னணு சேவைகள் வழங்கி வரும் தனியார் கடைகளில் கூடு தல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் புகார்களின் மீது ஆய்வு செய்யப்பட்டு அபாரதம் மற்றும் இயங்க தடை விதித்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சி யர் கூட்டத்தில் தெரிவித்தார். இக்கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு அலுவலர் ரமேஷ், துறை சார்ந்த அலுவலர்கள், நுகர் வோர் பாதுகாப்பு அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கார் கவிழ்ந்து வாலிபர் பலி
உதகை, அக்.7- உதகை, தலைகுந்தாவை அடுத்த முத்தநாடுமந்துவை சேர்ந்தவர் நவீன்குமார் (32). இவர் காரில் உதகை நோக்கி சென்று கொண்டிருந்தார். காக்கா தோப்பு, பாரதியார் நகர் பகுதியில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, 15 அடி பள்ளத்தில் கவிழ்ந் தது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புதுமந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.