districts

img

வடகிழக்கு மாநிலங்களில் பயணம் தமுஎகச இலக்கிய அமர்வில் அனுபவப் பகிர்வு

திருப்பூர், நவ. 28 – திருப்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத் திய இலக்கிய அமர்வில், வடகிழக்கு  மாநிலங்களுக்கு பயணம் சென்று வந்த  யோகி செந்தில் தனது அனுபவங்க ளைப் பகிர்ந்து கொண்டார். திருப்பூர் முருங்கப்பாளையம் தோழர் கே.தங்கவேல் நினைவகத்தில் ஞாயிறன்று தமுஎகச வடக்கு கிளை யின் இலக்கிய அமர்வு நடைபெற்றது. வடக்கு கிளை சார்பில் பி.குமார் தலைமை வகித்தார். வடக்கு கமிட்டி  உறுப்பினர் எஸ்.தனபால் வரவேற் றார். இதில் விடுதலை இராசேந்திரன் எழுதிய சங் பரிவாரத்தின் சதி வரலாறு  என்ற நூலை முன்வைத்து நவீன மனிதர் கள் ஒருங்கிணைப்பாளர் பாரதி சுப்பரா யன் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து வடகிழக்கு மாநில பயண அனுபவங்களை தமுஎகச  வடக்கு கமிட்டி உறுப்பினர் யோகி செந் தில் விளக்கிக் கூறினார். குறிப்பாக மணிப்பூர் பிரச்சனை பூதாகரமாக வெடித்துக் கிளம்பிய பின்னணியில் வட கிழக்கு மாநிலங்களைப் பற்றி அறிந்து  கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட் டுள்ளது. இந்த சூழலில் யோகி செந்தி லின் பயண அனுபவத்தை அனைவ ரும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். தமிழ்  மொழி சிறப்புகள் குறித்து பார்த்திபன் எடுத்துரைத்தார். இதில் தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், மங்கலம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் வே.முத்துராமலிங்கம் மற்றும் டி.சம் பத், பி.அருள்பிரகாஷ், என்.ரஞ்சித், கோகுல் உள்பட சுமார் 60 பேர் இதில் கலந்து கொண்டனர். நிறைவாக வடக்கு துணைச் செயலாளர் பொன்.பாலகுமாரன் நன்றி கூறினார்.