திருப்பூர், ஜூலை 5- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மும் மூர்த்தி நகர் அருகிலுள்ள கருப்பராயன் நகர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த பலத்த மழையால் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவு நீர் புகுந்து சிரமத்திற்கு உள்ளாகினர். உரிய கழிவுநீர் வடிகால் இல்லாததே இதற்குக் காரணம் என கூறப்பட்டது. இம்முறை மழை வருவதற்குள் இப்பிரச்சனைக்கு மாநகராட்சி நிர்வாகம் தீர்வு ஏற்படுத்தி விடும் என்ற எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர். கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழையில் திருப்பூர் பி.என்.ரோடு மும்மூர்த்தி நகர் அருகிலுள்ள கருப்பராயன் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுக ளுக்குள் மழைநீருடன் கலந்து கழிவுநீர் புகுந் துவிட்டது. கழிவுநீர் வெளியேற கால்வாய் இல்லாததால், நீர் உறிஞ்சும் லாரியின் மூலம் கழிவுநீரை நிரப்பி வெளியேற்றும் சூழல் இருந்தது. கடந்தாண்டு நடந்த சம்பவம் குறித்து கருப்பராயன் நகர் பகுதி மக்கள் கூறுகை யில், பெரிய மழை பெய்யும் போதெல் லாம் மழைநீர் வீடுகளுக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழையில் பாண்டியன் நகர், பூலுவபட்டி, பிஎன் சாலை மும்மூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடைநீரும், மழை நீருடன் கலந்து இப்பகுதியில் உள்ள வீடு களுக்குள் புகுந்து விட்டது. புத்தகங்கள், வீட்டு உபயோக பொருட் கள் உள்ளிட்ட பல பொருட்கள் சேதமா னது. இரு நாட்களுக்கு தெரிந்தவர்கள், உற வினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். சிலர் வீடுகளில் உள்ள கட்டில், டேபிள் ஆகியவற் றின் மீது ஏறி இரவு முழுவதும் உறங்காமல் எப்போது விடியும் என்று காத்திருந்தோம். இரண்டு நாட்கள் எங்களது வீடுகளில் சமைக்க முடியவில்லை. உணவுக்கு கூட மற்றவர்களை சார்ந்து இருந்தோம். சில வீடு களில் இருந்து கழிநீரை வெளியேற்ற மூன்று நாட்கள் கூட ஆகியது. பல அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆண்டு மழை காலம் தொடங்க உள்ளது. என்னென்ன பணிகள் நடைபெற்றது என தெரியவில்லை. கடந்த ஆண்டு தனியார் நிலத்தில் கால் வாய் அமைக்கும் பணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் தீர்வுவரும் எனமாநகராட்சி அதிகாரிகள் தெரி வித்தனர். ஆனால் தனியார் நிலத்தில் நீர் உள்ளே செல்லாதவாறு இப்போது தடுப்பு சுவர்கட்டும் பணி தீவிரமாக நடை பெறுகிறது. கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் நாங்கள் துன்பப்பட மாநகராட்சி நிர்வாகம் விடாது என நம்புகிறோம் என்று தெரிவித்தனர். இதுகுறித்து 8ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வேலம்மாள் காந்தி கூறு கையில்,கருப்பராயன்நகர் பகுதியில் 1௦௦௦ க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்ற னர். கடந்த ஆண்டு பெய்த மழையில் இப்ப குதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி னர். இந்த ஆண்டு அதேபோல் நடைபெறா மல் இருக்க நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கங்காநகர் பகுதிகளில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பல பகுதி களில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் லிங்க் (இணைப்பு) செய்யப்படாமல் உள்ளது. தனியார்க்கு சொந்தமான நிலத்தின் வழியாக கழிவுநீர் கால்வாய் கொண்டு செல்ல பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தீர்வு எட்டப்படாத தால், அருகில் உள்ள இன்னொரு தோட்ட உரிமையாளரிடம் இப்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்க னவே மாநகராட்சி அதிகாரிகள் வந்து ஆய்வு செய்துள்ளனர். வரும் வாரத்தில் மேயரும் வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். விரை வில் கருப்பராயன் நகர் பகுதியில் இருந்து கழிவு நீரை வெளியேற்றும் வகையில் கால் வாய் அமைத்து, இப்பகுதியில் உள்ள அனைத்து வீதிகளில் இருந்தும் வெளியே றும் கழிவுநீரை இத்துடன் இணைத்து விட் டால் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டு விடும், என்று தெரிவித்தார்.