தருமபுரி, செப்.12- தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட் டத்தை பேரூராட்சி, நகராட்சி, மாநக ராட்சி பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண் டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட் டத்தை பேரூராட்சி, நகராட்சி, மாநக ராட்சி பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண் டும். விவசாய தொழிலாளர்களுக்கு தனித் துறையை துவங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாகவும், தினக் கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத் தில் வேலை கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும். வேலையில்லா காலத் திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். நிலம் இல்லாத விவசாய கூலித்தொழி லாளர்கள், முறைசாரா தொழிலாளர்க ளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி செவ்வாயன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக, தருமபுரி ஆட்சி யர் அலுவலகம் முன்பு மாதர் சங்க மாவட் டச் செயலாளர் ஆர்.மல்லிகா தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா, நகரச் செயலாளர் நிர்மலா ராணி, மாவட்ட நிர்வாகிகள் பி.கிருஷ்ணவேணி, கே.சுசிலா, தனலட்சுமி, மாலா, தமிழ் மணி, ரங்கநாயகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றிய நிர் வாகி துளசி தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ்.கீதா, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, இடைக்குழு செயலாளர் டி.பெருமா, மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ரம்யா, மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகி கந்தன், காளி தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதேபோன்று சேலம் ஆட்சியர் அலு வலகம் முன்பு மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வைரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்து. இதில் சங் கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஞானசௌந்தரி, மாவட்ட உதவித்தலை வர் டி.பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை இதேபோன்று நூறுநாள் வேலை திட் டத்தை, நகரப்பகுதிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் என ஆட்சியர் அலுவல கம், கிணத்துக்கடவு, மேட்டுப்பாளை யம், எஸ்.எஸ்.குளம் அத்திப்பாளையம் ஆகிய நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய அலு வலகங்களில் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட் டத் தலைவர் ஜோதிமணி, செயலாளர் சுதா, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட் சுமி, பொருளாளர் உஷா உள்ளிட்ட மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.