தருமபுரி, ஏப்.6- இலக்கியம்பட்டி ஊராட் சிக்குட்பட்ட சீப்பர் காலனி யில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருட காலமாகியும், பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாக இருப் பதால் அப்பகுதி மக்கள் தண்ணீரின்றி அவதிக்குள் ளாகி வருகின்றனர் தருமபுரி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது பிட மனேரி. இங்கு சீப்பர் காலனியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடி நீர், தெரு விளக்கு, சாலை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இன்றி வசித்து வருகின்றனர். ஆகவே, அடிப்படை வசதி களை ஏற்படுத்தி தரக்கோரி அதிகாரிக ளிடம் மனு கொடுத்ததன் அடிப்படையில் 2020 - 21 ஆம் ஆண்டு 15 ஆவது நிதிக்குழு மானியத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டிக் கொடுக்கப்பட்டு ஒரு வருடம் முடிவடைந்துவிட்டது. இருப்பினும், இந் நாள் வரை மேல்நிலை தொட்டி காட்சிப் பொருளாக இருந்து வருகிறது. தண்ணீருக் காக 500 மீட்டர் தூரம் சென்று சின்டேக் நீர்த் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல், தெருவிளக்குகள், கழிவு நீர் கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பொதுமக் கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்ற னர். எனவே, குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொ டுக்கவேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.