உதகை, ஆக.13- விடுமுறை தினத்தை முன்னிட்டு உத கைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்து மகிழ்ச்சியடைந் தனர். யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பய ணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால், கோடை சீசனில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் - குன்னூர் - உதகை இடையே தலா ஒரு முறை, உதகை - குன் னூர் இடையே, தலா நான்கு முறை மலை ரயில் இயக்கப்படுகிறது. கோடை சீசன் காலத்தில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், ரயில்வே நிர்வாகம் மேட்டுப் பாளையம் - உதகை, உதகை - குன்னூர் மற் றும் உதகை - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில்கள் இயக்கியது. இதற்கு சுற்றுலா பய ணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த தால், ஜூலை மாதம் இறுதி வரை சேவை நீட் டிக்கப்பட்ட நிலையில், இந்த சிறப்பு ரயில் கள் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீடிக்கப்பட் டுள்ளது. ஆக.27 ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் கள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், வார விடுமுறையான ஞாயிறன்று உதகை சிறப்பு மலை ரயிலில் பயணிக்க தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்ததால், உதகை மலை ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. உதகை மலை ரயிலில் பயணிக்க வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் ரயில் நிலையத் தில் புகைப்படங்கள் எடுத்தும், பழமையான ரயிலில் பயணித்தும் விடுமுறை தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். ஏற்காடு சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து, குளுமை யான காலநிலை நிலவி வருகிறது. இதை அனுபவிக்க விடுமுறை தினமான ஞாயி றன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற் காட்டில் குவிந்துள்ளனர். தமிழகத்தின் பல் வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணி கள் ஏற்காடடில் குவிந்துள்ளனர். இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களாக அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வ ராயன் குகை கோயில், தாவரவியல் பூங்கா, ஐந்தினை பூங்கா போன்ற இடங்களில் குடும் பத்துடன் குவிந்தனர். பெரும்பாலான சுற் றுலா பயணிகள் படகு சவாரி செய்ய ஏற்காடு படகு இல்லத்தில் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் அதிகளவில் வருவதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலை ஏற் பட்டது. ஏற்காடு, ஒண்டிகடை, ரவுண்டானா பகுதி, அண்ணா பூங்கா சாலைகளிலும் போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டது.