districts

கோயில்களுக்கு 62 அறங்காவலர்கள் நியமனம் தேர்வு குறித்து ஊராட்சித் தலைவர்கள் அதிருப்தி

திருப்பூர், மே 27 – இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்க ளுக்கு 62 அறங்காவலர்கள் நியமனம்  செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த  அறங்காவலர் தேர்வு குறித்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு முறை யாக தெரிவிக்காமல், பொருத்தம்  இல்லாதவர்கள் பலர் நியமிக்கப் பட்டு இருப்பதாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள் ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட் சியர் தா.கிருஸ்துராஜ் தலைமை யில், மேயர் ந.தினேஷ்குமார் முன்னி லையில் மாநில தமிழ் வளர்ச்சி மற் றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சனியன்று, இந்து சமய  அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்  உள்ள கோயில்களில் அறங்காவ லர் குழு உறுப்பினர்களாக நியமிக் கப்பட்ட 62 பேருக்கு ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதவி  ஆணையர்கள் (இந்து சமய அற நிலையத்துறை) செந்தில்குமார், முத் துராமன், கலைச்செல்வி, ஜெகநா தன்சாமி, திருப்பூர் மாநகராட்சி 4ஆம்  மண்டலத்தலைவர் இல.பத்மநா பன், திருப்பூர் மாவட்ட அறங்காவலர்  குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணி யம், செயல் அலுவலர் சினீவாசன் மற் றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர்  கலந்து கொண்டனர்.

ஊராட்சி மன்றத் தலைவர்கள் அதிருப்தி

இந்து சமய அறிநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கும் விபரம், அந்தந்த ஊர்க ளின் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று பல ஊராட்சித் தலைவர்கள் புகார் கூறினர். குறிப்பாக தங்கள் ஊர் களில் உள்ள கோயில்களுக்கு தகுதி யானவர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும். ஊராட்சி நிர்வா கத்துக்கு இந்த தேர்வு குறித்து தெரி வித்திருந்தால், கோயில் வழிபாடுக ளில் ஈடுபாடுள்ள, நேர்மையானவர் கள், தகுதியானவர்கள் விபரத்தைக் கொடுத்திருப்போம். அதன் மூலம் இந்து அறநிலையத் துறை கட்டுப் பாட்டில் உள்ள கோயில்கள் வெறுப் புணர்வு கொண்டவர்களிடம் சிக்கா மல், நல்ல முறையில் செயல்படுவ தற்கு உதவியாக இருந்திருக்கும்.  ஆனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த வர்கள், பொருத்தமில்லாதவர்கள் கூட பல கோயில்களில் அறங்கா வலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஏற்புடையதாக இல்லை என்று  அவர்கள் தெரிவித்தனர். வெளிப்படைத் தன்மை இல்லா மல், கோயில்களில் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை அறங்காவ லர்களாக நியமிப்பது முந்தைய அதி முக ஆட்சிக் காலத்திலும் நடந்து  வந்தது. காலம் காலமாக இது போல்  நடைபெறுவதை தற்போதைய ஆட்சி களைய வேண்டும் என்ற எதிர் பார்ப்பு மக்களிடம் உள்ளது. ஆனால்,  பழைய நிலையே இப்போதும் தொடர்வது சரியல்ல. உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரிவித்து  அந்தந்த பகுதிகளில் உள்ள கோயில் களுக்கு நேர்மையானவர்களை அறங்காவலர்களாக நியமிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று  திருப்பூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின்  தலைவரும், இடுவாய் ஊராட்சி மன் றத் தலைவருமான கே.கணேசன் கூறியுள்ளார்.