பி.எஸ்.எப் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், ஐடிபிபி,எஸ்.எஸ்.பி, மற்றும் ஏ ஆர் உள்ளிட்ட துணை ராணுவப் படைகளில் பணியாற்றி ஓய்வுக்கு பிறகு ரானுவத்திற்கு இணையான சலுகைகள் கிடைப்பதில்லை. இதில், ஒன்றிய பாஜக அரசு பாரபட்சமாக நடந்துகொள்கிறது. எனவே, ஒரே உழைப்பு, ஒரே ஓய்வூதியம், ஒரே சலுகைகள் வழங்க வலியுறுத்தி முன்னாள் துணை ராணுவப்படை வீரர்கள் கூட்டமைப்பு சார்பில் வெள்ளியன்று (பிப்.14) மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் உரையாற்றினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.