districts

img

எட்டின்ஸ் சாலை விரிவாக்க பணிகள் துவக்கம்

உதகை, ஆக.25- உதகை பேருந்து நிலையம் முதல் சேரிங் கிராஸ் வரை உள்ள எட்டின்ஸ் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப் பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்து 27  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். இதேபோல் வழக்கமான நாட்க ளில் சுமார் 10 ஆயிரம் பேரும், வார விடு முறை நாட்களில் சுமார் 15 ஆயிரம் பேரும், சீசன் காலங்களில் ஒரு லட்சத்துக்கு அதிக மான பேரும் உதகைக்கு வந்து செல்கின்ற னர். 500க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும், 3436 நிறுவனங்களும் உள்ளன. ஒரே சமயத் தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருவதால் நகரில் சேரிங்கிராஸ், ஏடிசி, புதிய பேருந்து நிலையம், மார்க்கெட் உட்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக சீசன் காலங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, நகருக்குள் வாகனங்கள் வர  தடை விதிக்கப்படுகிறது. இதனால் ஆர்வ மாக சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்ற மடைகின்றனர். பல்வேறு சுற்றுலா தளங்க ளுக்கு செல்ல முடியாமல் மீண்டும் தங்கும் விடுதிக்கு திரும்புகின்றனர். எனவே, உதகை நகரில் வாகன நிறுத் தும் இடங்கள் அமைக்கவும், சாலைகளை அகலப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதி யாக உதகை பேருந்து நிலையத்திலிருந்து ஏடிசி வழியாக சேரிங்கிராஸ் வரை செல்லும் எட்டின்ஸ் சாலை அகலப்படுத்தும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதுகு றித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், உதகை நகர் பகுதியில் போக்குவரத்து நெரி சலை குறைக்கும் வகையில், பேருந்து நிலை யத்தில் இருந்து சேரிங்கிராஸ் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சாலையை அகலப்ப டுத்த திட்டமிடப்பட்டு டெண்டர் வெளியிடப் பட்டு உள்ளது. டெண்டர் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முடிந்து இருந்தா லும், கோடை சீசன் காரணமாக பணிகள் தற் போது தான் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதத்தில் இந்த பணிகள் முடிந்துவிடும். இந்த திட்டப்படி சாலையின் இருபுறமும் அகலப்படுத்தப்பட்டு, பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை மற்றும் கைப்பிடி அமைக்கப்படும். இதனால் சுற் றுலா பயணிகள் எளிதாக நடந்து செல்லலாம்.  போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபா யம் குறையும். இதற்கிடையே சாலை அகலப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக ஏடிசி பகுதியில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் கால்வாய் தூர்வாரப்பட்டு, நடை பாதை அமைக்கப்படுகிறது, என்றனர்.