districts

img

ஸ்கேட்டிங் போட்டியில் ஈரோடு மாணவர்கள் சாதனை

சேலம், மார்ச் 11- பஞ்சபடி  நிலுவையை உடனடி யாக வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், பட்டு வாடா செய்யப்படாத பஞ்சபடி  நிலு வையை உடனடியாக வழங்க வேண்டும். பதவி உயர்வு, போட்டி தேர்வில் உள்ள பாரபட்ச போக்கு களை களைய வேண்டும். ஓய்வூதி யர்களுக்கு மறுக்கப்படும் மருத்து வப்படி, ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிலுவை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கம், ஓய்வூதியர்கள் சங்கம், ஒப்பந்த ஊழியர்கள் சங்க ஒருங்கி ணைப்பு குழுவின் மத்திய அமைப்பு மாவட்ட பொது மேலாளர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அறைகூவல் விடுத்தது.  அதன்படி, சேலம் பொது மேலா ளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் இ.கோபால் உள் ளிட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என திரளா னோர் கருப்பு பேட்ஜ் அணிந்து, கண்டன முழக்கமிட்டனர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.கிருஷ் ணன், ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆர்.கோபாலன், மாவட்ட செயலாளர் டி.பாஸ்கரன், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் எம்.செளந்தரராஜன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.