ஈரோடு, ஆக. 5- ஈரோடு புத்தகத் திருவிழா வினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சிஎன்சி கல்லூரி மைதானத்தில், தொடங்கி வைத் தார். ஈரோடு புத்தகத் திருவிழா 12 நாட்கள் ஈரோடு சி.என்.சி கல்லூரி மைதானத்தில் வெள்ளியன்று துவங்கியது. இதில், 230-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இவ்விழாவை துவக்கிவைத்து பேசுகையில், தமிழ்நாடு அரசின் பெரும் முயற்சியால் மாநிலத் தில் உள்ள அனைத்து மாவட் டங்களிலும், புத்தக திருவிழா நடை பெற்று வருகிறது. இந்த புத்தக திருவிழா ஆண் டிற்கு ஒருமுறைதான் நடத்தப்படு கிறது. எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது வாசிப்பு திறனை மென்மேலும் அதிகரித்துக் கொள்ள வேண்டும். எனக்கு பள்ளி பருவத்தில் நண்பர்கள் அதிகம் கிடையாது. புத்தகங்கள் தான் நண்பர்கள். பெங்களூர், கப்பன் பூங்காவில் (கப்பன் ரீட்ஸ்) பொது மக்கள் வாரத்திற்கு ஒரு முறை, அதிக அளவில் இந்த கப்பன் பூங்கா விற்கு வருகை புரிந்து புத்தகங் களை வாசித்து தங்களது வாசிப்புத் திறனை அதிகரித்துக் கொள்கின்றனர். அதுபோல ஈரோட்டில் நடத்த எண்ணினேன். அதற்கான இடம் கிடைக்க வில்லை. அதனால் மாவட்ட ஆட் சியர் அலுவலக வளாகத்தில் பூங்கா அமைக்கப்படுகிறது. அங்கு வாரந்தோறும் சனிக்கிழமையன்று புத்தகங்களுடன் வந்து வாசிக்க ஏற்பாடு செய்யப்படும். அதனை ஈரோடு (ரீட்ஸ்) வாசிக்கிறது திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார். முன்னதாக, இந்த புத்தக திரு விழாவில், மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குண சேகரன் வரவேற்றார். ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத் தினம், துணை மேயர் வே.செல்வ ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட நூலக அலுவலர் யுவ ராஜ், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி முதல்வர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதல் விற்பனையை தேசிய நல விழிப்புணர்வு இயக்கத் தலைவர் எஸ்.கே.எம்.மயிலா னந்தமிடம், நந்தா கல்வி நிறுவனங் கள் தலைவர் வி.சண்முகன் பெற்றார். நிகழ்ச்சியில் பெரும் திர ளான மாணவ, மாணவிகள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் கலந்து கொண் டனர்.