ஈரோடு, ஜூன் 22- ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வியாழ னன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கேங்மேன் உள்ளிட்ட பணி யாளர்களுக்கு ஆறு சதமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தேர்வு செய்து நிலுவை யில் உள்ள 5000 கேங்மேன் பணியாளர்க ளுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத் தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.பெரியசாமி தலைமை ஏற் றார். செயலாளர் பி.ஸ்ரீதேவி, பொருளாளர் கே.விஜயகுமார், மண்டல செயலாளர் சி. ஜோதிமணி உள்ளிட்ட தலைவர்கள் பங் கேற்று உரையாற்றினர். முடிவில், சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஈரோடு மாவட்ட உதவி தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.