ஈரோடு ஜூன் 12ல் – 3 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு, ஜூன் 9- ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 12 ஆம் தேதியன்று 3 ஆயி ரத்து 194 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடை பெறவுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இதனையொட்டி மாவட்டங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதுதவிர முன் களப்பணி யாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் வருகிற ஜூன் 12 ஆம் தேதி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 3 ஆயிரத்து 194 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 4260 பணியாளர்கள் ஈடுபடுகின்ற னர். இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.கிருஷ்ணனுண்ணி கேட்டுக் கொண்டுள்ளார்.
நிலக்கடலை விதைப்பு பணி தீவிரம்
தருமபுரி, ஜூன் 9- வைகாசி பட்டத்தில் நிலக்கடலை விதைப்பு பணி மேற் கொண்டால் மகசூல் அதிகரிக்கும் என்பதால் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதைப்பு பணியை தீவி ரப்படுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இரு வாரங்களுக்கு முன்பு மாவட்டத்தில் பெய்த மழையின் கார ணமாக நிலப்பகுதியில் உழவு செய்ய நிலம் பதம் இருக்கி றது. இதனையடுத்து விவசாயிகள் நிலத்தை உழவு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். வைகாசி பட்டத்தில் நிலக் கடலை விதைப்பு பணி மேற்கொண்டால் மகசூல் அதிகரிக்கும் என்பதால் அன்னசாகரம், எரங்காட்டுக் கொட்டாய் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நிலத்தை சமன்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் நிலக்கட லையை விதைப்பு செய்து வருகின்றனர். தொடர்ந்து வரும் மழை காலங்களில் நிலக்கடலை முளைத்து தேவையான நீர் பருவமழை காலத்திலேயே கிடைக்கும் என்கிற எதிர்பார்ப் பில் விவசாயிகள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலக உணவு பாதுகாப்பு தினம்
தருமபுரி, ஜூன் 9- உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி காரி மங்கலம் அரசு பெண்கள் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் கல்லூரி உணவு கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. கல்லூரி வளாகத் தில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி முதல்வர் கீதா தலைமை தாங்கி துவக்கிவைத்தார். கல்லூரி உணவு கட்டுப்பாட்டு துறை பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். மருத்து வர் பானுசுஜாதா உணவு பாதுகாப்பு துறையின் செயல்பாடு கள், இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். முன்னதாக, பாலக்கோடு காரிமங்கலம் ஒன்றிய உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நந்தகோபால் பேசுகையில், மளிகை கடைகளில் அனைத்து பொருட்களிலும் தயாரிப்பு தேதி, காலாவதி ஆகும் தேதி, அளவு, ஆகியவற்றை சரி பார்த்து வாங்க வேண்டும். மாணவிகள் வாங்குவதுடன் அதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றார். மேலும், காலாவதியான குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் தீமைகள், டீத்தூள், வெல்லம், கடுகு உள்ளிட்ட உணவுப் பொருட்க ளில் கலப்பட தன்மை உள்ளதா என்பதை வீட்டிலிருந்தே கண்டறியும் செயல்முறையை செய்து காண்பித்தார். இதையடுத்து பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர் உணவு பாதுகாப்பு உறுதி மொழி ஏற்றனர். இதில், ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு
ஈரோடு, ஜூன் 9- நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.89 அடியாக அதிக ரித்து உள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடி நீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில், பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதி கரித்து அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வியாழனன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 907 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. மேலும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 80 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
புலியை வனத்திற்குள் விரட்ட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை - வனத்துறையினர் ஆய்வு
ஈரோடு, ஜூன் 9- தாளவாடி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து கொல்லும் புலியை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு தாளவாடி வனச்சர கத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் வெளியேறும் புலி, அருகில் உள்ள கிரா மங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை கொன்று வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேசன் நகர் பகுதியை சேர்ந்த விவசாயி யான நாகமணி என்பவரின் பசு மாட்டை புலி அடித்து கொன்றது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் அச்சமந்துள்ளனர். இந்நிலை யில், சத்தியமங்கலம் புலிகள் காப்ப கம் ஆசனூர் வனகோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா மற்றும் வனச்சரகர் சதீஷ் ஆகியோர் இறந்த பசு மாட்டுக்கு உண்டான இழப் பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட விவ சாயிக்கு வழங்கினர். அப்போது அடர் வனத்திற்குள் புலியை விரட்ட வேண் டும் என மக்கள் வலியுறுத்தினர். இந்த கிராமம் கர்நாடக வனப்பகுதியை யொட்டி உள்ளது. இதனால் கர்நா டக வனத்துறையினர் மற்றும் தமிழ் நாடு வனத்துறையினர் ஆகியோர் ஒன்றிணைந்து புலியை தீவிர மாக கண்காணித்து அடர்ந்த வனப்பகு திக்குள் விரட்டும் பணியை மேற் கொண்டு வருகின்றனர்.
எலுமிச்சை பழங்கள் விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்தது
ஈரோடு, ஜூன் 9– ஈரோடு மார்க்கெட்டிற்கு கொடைக்கானல், திண்டுக் கல், பெரியகுளம், தேனி, கம்பம் போன்ற பகுதிகளி லிருந்து நாள்தோறும் மூன்று டன் வரை எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருந்த நிலையில், அது ஒரு டன் என்கிற அளவில் வெகுவாக குறைந்தது. இதனால், ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது. ஒரு பழம் ரூ.10 லிருந்து ரூ.15 வரை விற்பனையானது. இந்நிலையில், மீண்டும் எலுமிச்சம்பழம் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு எலுமிச்சம் பழங்கள் வரத்து அதி கரிக்க தொடங்கியது. வியாழனன்று பெங்களூர், சேலம், கோவை, திருச்சி போன்ற பகுதிகளிலிருந்தும் ஐந்து டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வந்தது. இத னால் விலையும் சரிய தொடங்கியது. வியாழனன்று ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.80 க்கு விற்பனையானது. சில்லறை விற்பனையில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.5க்கு விற்பனையானது.
விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் கோவை ஆட்சியர் சமீரன் அறிவிப்பு
கோவை, ஜூன் 9- விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங் களிலும் வட்டியில்லாமல் விவசாயிகளுக்கு கடன்கள் வழங்கப்படுகிறது. இதில் பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், குறைந்த வட்டி யில் சுய உதவிக்குழு கடன், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்க ளுக்கான கடன் உள்ளிட்டவை அடங்கும். அதன்படி கோவை மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், நிலவுடைமை தொடர்பான கணினிச் சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பான கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கள் இருப்பிடத் திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்க ளில் கடன் மனு சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடைய லாம். மேலும், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பி னராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்க ளில் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.100 பங்குத்தொகை மற்றும் ரூ.10 நுழைவுக் கட்டணம் செலுத்தி கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினராக சேர்ந்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயன டையலாம். மேலும், சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினரல்லாத விவசாயிகள் தங்க ளுக்கு தேவையான உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்க ளில் சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதில், ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் கோவை மண்டல இணைப்பதிவாளரை 73387 203 01, கோவை சரக துணைப்பதிவாளரை 73387 20303 மற்றும் பொள்ளாச்சி சரக துணைப்பதிவாளரை 73387 20304 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கங் கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு நூறு நாள் திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலை
திருப்பூர், ஜூன் 9- முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ‘வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வினீத் வியாழனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று பணியிழந்த மக்கள் நலப்பணியா ளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ‘வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக” பணிபுரிய வாய்ப்பு வழங் கப்படவுள்ளது. எனவே அந்த நாளில் பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் தற்போது இப்பணியில் ஈடுபட, விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்பக் கடிதம் மற்றும் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப் பித்து பணியில் சேருமாறு மாவட்ட ஆட்சியர் வினீத் கேட்டுக் கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் அவர்கள் ஏற்கனவே பணியாற் றிய ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடர்பு கொண்டு அவர்கள் முன்பு பணியாற்றிய விவரத்துடன் விண்ணப்பத்தையும், விருப்பக் கடிதத்தையும் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இடம் ஜூன் 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். அவ்வாறு பணியில் சேர விருப்பமுள் ளவர்கள் மட்டுமே இப்பணியிடத்திற்கு பரிசீலிக்கப்படுவர் என்பதால், இந்த அறிவிப்பிற்கு ஏற்ப தவறாமல் தொடர் புடைய வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
திருப்பூரில் மின்சாரம் தாக்கி மயில் பலி
திருப்பூர், ஜூன் 9- திருப்பூர் நகரின் போக்குவரத்து நெருக்கடி மிக்க குமரன் சாலை பகுதியில் மயில் ஒன்று மின்சாரம் தாக்கி உயிரி ழந்தது. திருப்பூர் குமரன் சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றின் மேற்கூரையின் மீது மயில் நின்றிருந்தது. அங்கி ருந்து பறந்து செல்ல முற்பட்டபோது அருகில் இருந்த மின் கம்பி மீது உரசியதில் மயில் மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மயில் உயிரிழந்தது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த மயி லின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து பின்னர் புதைத்தனர். இந்த மயில் ஒன்றரை வயது மதிக்கத் தக்கது என்று வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
தொழில் முனைவோருக்கு ரூ.3.45 கோடி கடன்
திருப்பூர், ஜூன் 9- திருப்பூர் மாவட்டத்தில் வங்கியாளர் குழுமம் நடத்திய நிகழ்ச்சியில் தொழில் முனைவோருக்கு ரூ.3.45 கோடி மதிப் பிலான கடன் வரைவோலைகள் மற்றும் ஒப்புதல் கடிதங் கள் வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அனைத்து வங்கிகளு டன் இணைந்து 75 ஆம் ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா மற்றும் தொழில் முனைவோர் கடன் வழங்கும் நிகழ்ச்சியை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடத்தினர். இந்நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் தலைமையேற்று நடத்தினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன், கனரா வங்கி மண் டல அலுவலக உதவி பொது மேலாளர் கண்ணன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் அசோக்குமார் மற்றும் உதவி திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண் டனர். இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ. 3.45 கோடி அளவில் தாட்கோ, பி.எம்.இ.ஜி.பி, கல்விக் கடன் ஆகிய திட்டங்களில் வரைவோலை மற்றும் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது. அரசு மற்றும் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் குறித்த தகவல்களை மாவட்ட தொழில் மையம், தாட்கோ, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சார்ந்த தகவல்கள், சுயவேலை வாய்ப்பு பயிற்சிகள், பிரதம மந்திரியின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து நிதிசார் கல்வி மையம் ஆகிய அமைப்புகளும் எடுத்துரைத்தனர். இவ்விழாவில் கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, டிபிஎஸ் வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகள் மற்றும் 350க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழா வில் பெறப்பட்ட ரூ.2.64 கோடி மதிப்பிலான கடன் விண்ணப் பங்களை வங்கிகள் விரைந்து பரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கூறினார்.
ஜூன் 12 ஆம் தேதியன்று கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்
திருப்பூர், ஜூன் 9- திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநக ராட்சிப் பகுதிகளில் வரும் ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 12) 30ஆவது கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படு கிறது.இதில் 20ஆயிரம் பேருக்கு தடுப் பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங் கள் அல்லது 39 வாரங்கள் ஆன சுகா தாரப் பணியாளர்கள், முன்களப் பணி யாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற் பட்டோர் இம்முகாமில் பூஸ்டர் தடுப் பூசி வழங்கப்படும். மேலும் இரண்டாம் தவணை செலுத்தி 90 நாட்கள் ஆன வெளிநாடு செல்லும் நபர்களுக்கும் இந்த முகாமில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். திருப்பூர் மாநகரில் அரசு மருத்து வமனை, ஆரம்ப சுகாதார நிலையங் கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக் கூடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையம் உள்பட மொத்தம் 380 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறும். கோவி சீல்டு 95 ஆயிரம் டோஸ், கோவேக்சின் 49 ஆயிரத்து 400 டோஸ் மற்றும் கார்பிவேக்ஸ் 21 ஆயிரத்து 560 டோஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளும்படி மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி கேட் டுக் கொண்டுள்ளார்.
சிறுமியை ஏமாற்றி வல்லுறவு போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
திருப்பூர், ஜூன் 9- தாராபுரம் பகுதியில் பள்ளி செல்லும் 17 வயதுக்கு உட் பட்ட சிறுமியை கொழிஞ்சிவாடி பகுதியில் வசிக்கும் சஞ்சய் என்கிற மணிகண்டன் (வயது 20) காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வீட்டில் யாரும் இல்லாதபோது அவரிடம் பாலியல் வல்லுறவு கொண்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பே ரில் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் கவிதா விசாரித்து மணிகண்டனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.
நாளை பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர் முகாம்
திருப்பூர், ஜூன் 9- திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப் புக் குறை தீர் முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர் கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு மக்களிடம் பெறும் மனுக்களுக்கு உடனடித் தீர்வு காண இருப்பதாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள் ளது. அவிநாசி பழங்கரை, மடத்துக்குளம் துங்காவி, பல்ல டம் புளியம்பட்டி, திருப்பூர் வடக்கு கணக்கம்பாளையம், திருப்பூர் தெற்கு ஆண்டிபாளையம், உடுமலை புக்குளம், ஊத்துக்குளி செங்கப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தாராபுரம், காங்கயம் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இந்த முகாம் நடைபெறுகிறது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை உள்ளிட்ட மின்னணு குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகளை தீர்வு காணலாம். இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய் பீம் கூறியுள்ளார்.
வாக்குச்சாவடி வரைவு பட்டியல்
திருப்பூர், ஜூன் 9- திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி இடங்களுக்கு வரைவு வாக்குச்சாவடி பட்டி யல், வியாழனன்று வெளியி டப்பட்டது. அவிநாசி ஒன்றியம் 16 ஆவது வார்டு, பல்லடம் ஒன்றியம் 1ஆவது வார்டு தலா 11 வாக்குச்சாவடிகள், ஊத்துக்குளி இச்சிபாளை யம் ஊராட்சி மன்றத்தலை வர் பதவிக்கு 3 வாக்குச்சாவ டிகள், அய்யம்பாளையம் 6 ஆவது வார்டு,குடிமங்கலம் ஊராட்சி 1ஆவது வார்டு, ஆலம்பாடி 9ஆவது வார்டு, வடக்கு அவிநாசிபாளை யம் 7ஆவது வார்டு, அந்தி யூர் 2ஆவது வார்டு ஆகிய ஊராட்சி உறுப்பினர் இடங்க ளுக்கு தலா 1 வீதம் 5 வாக் குச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சேலம், ஜூன் 9- சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஒன்றிய அரசின் தொழிற்பழகுநர் சட்டம் 1961-ன்படி 30-க்கும் மேற்பட்ட பணி யாளர்களை கொண்டு செயல்படும் அரசு மற்றும் தனியார்த் துறை நிறுவனங்கள் தொழிற்பழகுநர்களை ஆண்டு தோறும் சேர்த்து அவர்களது தொழிற்சாலைகளில் மாதந் தோறும் உதவித்தொகையுடன் பழகுநர் பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகு நர் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்காக தொழிற்சாலை கள் மற்றும் ஐடிஐ, டிப்ளமோ,டிகிரி மாணவர்களை இணைக் கும் பொருட்டு மாதந்தோறும் இரண்டாம் திங்கள் கிழமை களில் அந்தந்த மாவட்டங்களில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. அதனைத்தொடார்ந்து தொழிற்சாலைகளில் காலியாக உள்ள தொழிற்பழகுநர் இடங்களை பூர்த்தி செய்யும் வகை யில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வரும் ஜூன் 13 ஆம் தேதியன்று சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளா கத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 வரை நடைபெற உள்ளது. இதில், ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த மாண வர்கள் அனைவரும் தங்களது அனைத்து உண்மை சான்று கள் மற்றும் சுய விவரத்துடன் (பயோடேட்டா) கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
தருமபுரி, ஜூன் 9- தருமபுரி அருகே, பணத்தை வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் வெங்க டேஷ்குமார் தலையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுட்டனர். அப்போது நட்டகானம்பட்டி குட்டச்சந்து புளியந்தோப்பில் பணம் வைத்து சூதாடிக்கொண்டி ருந்தனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர் களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடந்த விசாரணை யில் நட்டகானம்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் (35), தன்ராஜ் (36), ராஜ் (39), சுந்தரபாண்டியன் (39) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து நான்கு இருசக்கர வாக னங்கள் மற்றும் ரூ.9 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
வாகனம் மோதி மான்குட்டி பலி
ஈரோடு, ஜூன் 9- பண்ணாரி அருகே வாகனம் மோதி குட்டி மான் ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. பண்ணாரி செல்லும் பாதையில் சிக்கரசம்பாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் மான்குட்டி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மான்குட்டி மீது மோதி நிற்காமல் சென்றுவிட் டது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சத்திய மங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத் துறையினர் மான்குட்டியை மீட்டு சிகிச்சைக்காக காராச்சி கொரையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி மான்குட்டி இறந்தது. மான்குட்டி மீது மோதிய வாகனம் பற்றி வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மூதாட்டி பாலத்காரம்
கோவை, ஜூன் 9- மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை நெகமம் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட் டியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, புதனன்று மாலை மாடு களை தோட்டத்தில் கட்டி வைப்பதற்காக சென்றுள்ளார். அப் போது அவ்வழியாக மதுபோதையில் வந்த அதேப்பகு தியை சேர்ந்த நாகராஜ் (25) என்பவர், திடீரென தான் அணிந்திருந்த வேட்டியை கழற்றி மூதாட்டியின் முகத்தில் மூடினார். இதனையடுத்து அவரை கீழே தள்ளி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் நாகராஜ் அங்கி ருந்து தப்பிச் சென்றார். வீட்டிற்கு சென்ற மூதாட்டி, தனது கணவரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனைய டுத்து மனைவியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு நெகமம் காவல் துறையில் புகார் அளித்துள் ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து, தலைமறை வாக உள்ள நாகராஜை தேடி வருகின்றனர்.
வாகன விபத்து: அகதிகள் முகாமை சேர்ந்தவர் உட்பட இருவர் பலி
கோவை, ஜூன் 9- கோவை செல்வபுரம் அருகே பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பூலுவம்பட்டி அக திகள் முகாமை சேர்ந்த பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை மாவட்டம், பேரூர் நோக்கி இருசக்கர வாகனத் தில் வாலிபரும், இளம்பெண் ஒருவரும் சென்று கொண்டி ருந்தனர். செல்வபுரம் அருகே சென்றபோது எதிர்பாராதவித மாக இருசக்கர வாகனமும், அவ்வழியாக வந்த பேருந்தும் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த இரு வரும் சாலையில் விழுந்தனர். அப்போது, அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், 2 பேரின் சடலங்களையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த சவுரிபாளையத் தைச் சேர்ந்த மனோஜ் (25) என்பதும், பின்னால் அமர்ந்தி ருந்த பெண் பூலுவாம்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த ஆர்த்தி (19) என்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.