ஈரோடு: பொய் வழக்கு தள்ளுபடி
ஈரோடு, ஜன. 16- கல்வி நிலையத்தில் நிலவும் சாதிய பாகுபாடை எதிர்த்த சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மீது பெரியூர் காவல்துறையினர் பதிந்த பொய்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்திற்குட்பட்ட, பெரியூ ரில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ச.தனலட்சுமி மாணவர்களிடையே சாதிய பாகு பாடு பார்த்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து மூன்று வட்டார கல்வி அதிகாரிகள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டடு இப்புகாரின் தன்மை உறுதி செய்யப்பட் டது. இந்நிலையில், குற்றமிழைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாதிய பாகுபாட்டை உருவாக் கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டிய போலீ சார், நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 தோழர்கள் மீது பொய்வழக்கு புனைந்தது காவல்துறை. மலையம்பா ளையம் காவல் ஆய்வாளரின் நடவடிக்கையை எதிர்த்து சட்டபோராட்டம் நடத்தியது சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள், சென்னை உயர்நீதிமன் றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் மலையம்பாளை யம் காவல் காவல் ஆய்வாளரின் ஒருதலைப்பட்சமாக ஆர்ப் பாட்டம் நடத்திய 22 தோழர்கள் மீது போடப்பட்டது உறுதியா னது. இதனையடுத்து எப்ஐஆரை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஜான் சலிவனின் நினைவு நாள்
உதகை, ஜன. 16- நீலகிரி மாவட்டத்தை வெளி உலகிற்கு அறிமுகபடுத்திய ஜான் சலிவனின் 169 ஆவது நினைவு நாளையொட்டி உதகை யில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். நீலகிரி மாவட்டத்தை முதன் முதலாக வெளி உலகத்திற்கு அறிமுகபடுத்தியவர் ஜான் சலிவன். 1788-ஆம் ஆண்டு ஜன 15 -ஆம் தேதியன்று லண்டனில் பிறந்த இவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஈஸ்ட் இந்திய கம்பெ னியில் சிவில் சர்விசில் பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து அவர் 1821 -ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கண்ணேரி மூக்கு பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் தங்க முதன் முதலில் கட்டிடம் ஒன்றையும் கட்டினார். பின்பு மாவட்டம் முழுவதையும் கண்டுபிடித்ததுடன் வெளி உல கிற்கும் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணி களை மேற்கொண்ட இவர் 1855- ஆம் ஆண்டு இயற்கை எய்தி னார். முதன் முதலாக நீலகிரி மாவட்டத்தை கண்டு பிடித்து வெளி உலகத்திற்கு அறிமுகபடுத்தியதால் ஜான் சலிவனை நீலகிரி மாவட்டத்தின் தந்தை என அழைக்கபட்டு வருகிறார். இந்தநிலையில் திங்களன்று ஜான் சிலிவனின் 169 ஆவது நினைவு நாள் என்பதனால் உதகை தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள உருவ சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் அருணா உள் ளிட்ட பலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
மின்சாரம் தாக்கி சிறுவன் படுகாயம்
சேலம், ஜன. 16- ரயில் நிலையத்தில் நின்று கொண்டி ருந்த சரக்கு ரயில் மீது ஏறிய சிறுவன் மீது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், சங்ககிரி ஆர்.எஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகாந்த் மகன் ஸ்ரீனி வாசன் (13). இவர் எடப்பாடி கொங்கணா புரம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி கொங்கணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் தை பொங்கல் விடுமுறைக் காக தனது சொந்த ஊரான சங்ககிரிக்கு வந்த சிறுவன், சம்பவத்தன்று, சங்ககிரி ரயில் நிலையத்தை சுற்றி பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றுள்ளார். சங்ககிரி ரயில் நிலையம் வந்து பிளாட்பாரம் 1ல் பின்புறம் உள்ள ரயில்வே டிராக்கில் நின்றிருந்த டீசல் கூட்ஸ் வண்டியில் ஏறியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியுள் ளது. கீழே விழுந்த சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார். இதனைக்கண்ட அங்குள்ள ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சிறு வனை மீட்டு, அருகில் உள்ள சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறு வன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சரக்கு ரயில் மீது ஏறிய சிறுவன் மீது மின்சா ரம் தாக்கி படுகாயம் அடைந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து – இருவர் பலி
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து – இருவர் பலி உதகை, ஜன. 16- நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து அய்யன்கோள் ளிக்கு செவ்வாயன்று இரவு அரசு பேருந்து மலைப்பாங்கான சாலையில் சென்றது. அப்போது ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த மின்மாற்றி மீது மோதியது. இதனால், பேருந்து மீது மின்சாரம் பாய்ந்து ஒட்டுனர் நாகராஜ்(50), பயணி பாலாஜி(51) ஆகிய இருவ ரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். மேலும், காயடைந்த நடத்துனர் மணிகண்டன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பயணிகளை, கூடலூர் மருத்துவமனை மற்றும் கேரளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உயிரிழந்த 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த னர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிதி பற்றாக்குறை - திணறும் பேரூராட்சி
உதகை,ஜன.16- நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கீழ்குந்தா பேரூராட்சியில், 16 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியில் போதிய நிதி இல்லாத தால் தடுப்பு சுவர் அமைத்தல், சாலை மேம்பாட்டு பணி, குடிநீர் திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாதாந்திர கூட்டத் தில் கவுன்சிலர்கள் வளர்ச்சி பணி குறித்து அதிகாரியி டம் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்காததால் பெரும்பா லான பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட் டுள்ளது. குறிப்பாக, அவசர தேவைக்கு வார்டு பகுதிகளில் சூழ்ந் துள்ள முட்புதர்களை அகற்ற பொது நிதியை பயன்படுத் துகின்றனர். அந்த நிதியும் முறையாக பராமரிக்கப்படாததால் நிதி பற்றாக்குறையால் பெரும்பாலான வார்டுகளில் புதர் சூழ்ந்து வனவிலங்கு அச்சத்தால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து ஆட்சியர் கவனத்திற்கும் இப்பகுதி மக்கள் கொண்டு சென்றுள்ளதாக தெரிகிறது.
இளம் மாணவ விஞ்ஞானிகள் கண்காட்சியில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்
உடுமலை, ஜன.16- உடுமலையில் நடைபெற்ற இளம் மாணவ விஞ்ஞானிகள் முகாமில் கலந்து கொண்ட மலையாண்டிபட்டிணம் அரசுப் பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்று உள்ளார்கள். கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இளம் மாணவ விஞ்ஞானிகள் முகாம் உடுமலை ஜிவிஜி கல்லூரி யில் நடைபெற்றது. இதில், மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்து சஞ்சய் மற்றும் கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அறிவியல் கண்காட்சி போட்டியில் பள்ளி மாணவன் சஞ்சய் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை தனியாகப் பிரித்து, ஹைட் ரஜனில் இருந்து தீ வர வைப்பது என்ற செயல்பாட்டை செய்து காட்டி முதல் பரிசை பெற்று உள்ளார். முதல் பரிசை பெற்ற இளம் விஞ்ஞான மாணவனுக்கு பள்ளியின் சார்பாகவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பிலும் பள்ளி மேலாண்மைக்குழு சார்பிலும் பாராட்டி தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உடுமலை சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த வேண்டுகோள்
உடுமலை, ஜன.16- உடுமலை பகுதியில் இருக்கும் அமராவதி மற்றும் திரு மூர்த்தி அணையில் அமைத்து இருக்கும் பூங்காவில் பராம ரிப்பு செய்ய பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளார் கள். திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலை யம் பகுதியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமராவதி மற்றும் திரு மூர்த்தி அணைகள் உள்ளன. இந்த இரண்டு அணைகளின் கரை பகுதியில் அழகான பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். மேலும், விடுமுறை தினத்தில் வரும் சுற்றுலாப் பயணிகள், பராம ரிப்பு இன்றி உள்ள பூங்காவால் ஏமாற்றத்துடன் செல்கிறார் கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு முதல்வர் உடு மலை அமராவதியில் உள்ள சைனிக் பள்ளியின் விழாவிற்கு வருவதாக இருந்தது. இதையடுத்து, அமராவதி மற்றும் திரு மூர்த்தி அணை பூங்காங்களை பராமரிப்பு செய்ய பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு வேலைகள் தொடங்கவிட்டது. ஆனால், முதல்வர் வருகை மாற்ற பட்டவுடன் பராமரிப்பு பணி களும் நிறுத்தப்பட்டு விட்டது. இதற்காக ஒதுக்கிய நிதியை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. இந்த இரண்டு பூங் காவும் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பா தல், அரசு ஒதுக்கிய நிதியில் பூங்கா பராமரிப்பு வேலைகளை செய்ய வேண்டும். பணிகளை பாதியில் நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காரல் மார்க்ஸ் நூலகத்தில் பொங்கல் விழா
திருப்பூர், ஜன.16- காங்கயத்தில் உள்ள காரல் மார்க்ஸ் நூலகத்தில் பொங்கல் விழா திங்கள்கி ழமை நடைபெற்றது. காங்கயம் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள காரல் மார்க்ஸ் நூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச் சிக்கு புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் காங்கயம் பொறுப்பாளர் பழ.திருமூர்த்தி தலைமை வகித்தார். இதில் மகளிர்க்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை வரும் பாராளு மன்றத் தேர்தலில் நடைமு றைப்படுத்த வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, உரையாற்றி னர். முன்னதாக நூலகம் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல் வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.
விதியை மீறி வாகன இயக்கம் ரூ 82 லட்சம் அபராதம்
உதகை,ஜன.16- நீலகிரியில் வட்டார போக்குவரத்துத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு விதிகளை மீறி வாகனங்களை இயக்கி யவர்களுக்கு ரூ82 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீலகிரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன வரி, தகுதிச்சான்று உள்ளிட்டவைகள் முறையாக உள் ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விதிமீறல் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த ஆண்டு ஜன முதல் டிச, மாதம் வரை மாவட் டத்தில் அனைத்து பகுதிகளிலும், 18 ஆயிரத்து 622 வாகனங் கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில், வரி செலுத்தா மலும், தகுதிச்சான்று பெறாமல் இயக்கப்பட்டு வந்த 304 வாக னங்கள் பிடிக்கப்பட்டன். மேலும் 3,264 வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகரா ஜன் கூறுகையில், கடந்தாண்டில் மட்டும் 18 ஆயிரம் வாகனங் கள் தணிக்கை செய்யப்பட்டது. அபராத தொகையாக, 82 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. வாகன உரிமையாளர்கள் வாகன வரிகளை முறையாக செலுத்துவதுடன், தகுதி சான்று முறையாக பெற்று விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். என் றார்.
குட்டியுடன் சாலையை கடந்த யானை
உதகை, ஜன. 16- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, லாஸ் நீர் வீழ்ச்சி அருகே குட்டியுடன் சாலையை கடந்த காட்டு யானை கள் கூட்டத்தை சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 10 நாட்க ளுக்கு மேலாக எட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் காட்டேரி, உலிக்கல், நான்செச் உள்ளிட்ட இடங்க ளுக்கு சென்று அங்குள்ள வாழை மரங்கள் உள்ளிட்டவை களை உண்டும், சேதப்படுத்தியும் வருகிறது. இந்நிலை யில், செவ்வாயன்று காலை காட்டேரி அருகே உள்ள டேன் டீ குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானை கூட்டம், அங்கி ருந்து வாழை மரங்களை ருசி பார்த்தது. தகவல் அறிந்து வனத்துறையினர் பாதுகாப்பு கருதி யானைகளை விரட்டும் நடவடிக்கை ஈடுபட்டனர். அப்போது குட்டிகளுடன் எட்டு யானைகள் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சா லையில் லாஸ் நீர்வீழ்ச்சி அருகே சாலையை கடந்து சென் றது. தொடர் விடுமுறைகாரணமாக ஏராளமானோர் உத கைக்கு படையெடுத்து வருகிற நிலையில், சாலையை காட்டு யானைகள் கடப்பதற்காக. வனத்துறையினர் இரு புறமும் வாகனத்தை நிறுத்தி வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். குட்டி யுடன் காட்டு யானைகள் சாலையை கடந்து செல்வதை வியப் புடன் பார்த்த சுற்றுலாப் பயணிகள் தங்களது கைப்பேசி யில், அனைத்தையும் பதிவு செய்து மகிழ்ந்தனர்.