கொரோனா போன்ற பெருந் தொற்று, பெருவெள்ளம் போன்ற பேரிடர் காலம் வந்தால், தூய்மைப்ப ணியாளர்கள், மின்வாரிய ஊழியர் கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள் உள் ளிட்டோர் நினைவுக்கு வருவார்கள். இவர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணியை பாராட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்கள். ஆனால், இவர்களின் கோரிக்கையை நிறை வேற்றுங்கள் என்றால் கள்ள மௌனம் காட்டுவது அதிகாரத்தில் இருப்பவர்க ளின் வாடிக்கை. சேவைத்துறைச் சார்ந்த துறை களை வலுப்படுத்த வேண்டும். அத்து றையின் ஊழியர்களை நிரந்திரமாக் கப்பட வேண்டும். இதுபோன்ற துறை கள் தனியார் வசமானால் அது சேவைத் துறை என்பதாக இல்லாமல் லாபம் ஈட்டும் துறையாக மாற்றப்படும். அப்படி இத்துறைகள் தனியார் வசமானால் பேரிடர் காலத்தில் பெரும் அவதிக்கு பொதுமக்கள் ஆளாவர்கள் என்பதே இடதுசாரிகள் தொடர்ந்து வலியுறுத்து கின்றன்ர். யார் என்ன சொன்னால் என்ன நாங்கள் அப்படித்தான் என்கிற போக் கில் குடிநீர் விநியோகம், தூய்மைப் பணி உள்ளிட்டு அனைத்தும் தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரப் படுத்தி வருகிறது ஈரோடு மாநகராட்சி. ஈரோடு மாநகராட்சியில் பொதுசுகா தார பிரிவில் தூய்மை பணியில் தனி யார் மயத்தை புகுத்தும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. கடந்த வருடமே முயற்சித் தார்கள்., ஆனால் எதிர்பாராத விதமாக சட்டமன்ற இடைத்தேர்தல் வந்ததால் அம்முயற்சி தற்காலிகமாக தள்ளிப்போ னது. அதன்பிறகும் முயற்சிக்கப்பட் டது. தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். மாமன்ற உறுப்பினர்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இதனால் ஏலம் எடுத்த தனியார் நிறுவனம் பொறுப்பேற் காமலே சென்று விட்டது. இந்நிலையில் ஒரு சில மாதங்களுக் குப் பிறகு மீண்டும் முயற்சிக்கப்பட் டது. அப்போதும் சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பி னர் வேலை நிறுத்தம் அறிவித்தனர். இடையில் தொழிலாளர் துறை தலை யிட்டது. குறைந்தபட்ச கூலி சட்டப்படி ஊதியம் அளிக்கப்படும் என்ற உடன் பாடு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட் டது. இந்நிலையில் சுமார் சுமார் 2லட்சம் குடியிருப்புகளைக் கொண்ட மாநகராட் சியில் நாள்தோறும் சுமார் 175 மெ.டன் குப்பைகளை சுமார் 1500 பணியாளர் களைக் கொண்டு கையாளும் நடவடிக் கைகளை ஒரே மூச்சாக தனியாரிடம் ஒப்படைப்பது என்பது இயலாது என்ப தால், பகுதி பகுதியாக தூய்மைப் பணி களை தனியாருக்கு விடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளது ஈரோடு மாநகராட்சி. இதன் ஒரு பகுதியாக நடந்து முடிந்த மாமன்றக் கூட்டத்தில் மாநகராட்சி எல் லைக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளி களின் கழிப்பறைகளை தனியார் வசம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற் றியுள்ளது. இதன் மூலம் 78 மாநக ராட்சி ஆரம்பப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை தூய்மை செய்தல், கழிவறையை சுத்தம் செய்து பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களைத் தேர்வு செய்யும். அதன் மூலம் இம்மாதம் முதல் 2025 ஜனவரி வரை ஓராண்டிற்கு தனியார் நிறுவனங்கள் பள்ளிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும். இதற்கு உத்தேச செலவினமாக ரூ.2 கோடியே 65 லட்ச ரூபாய் கணக்கிடப் பட்டுள்ளது. இவ்வாறு மண்டலவாரி யாக, படிப்படியாக அனைத்து பணிக ளும் தனியாரிடம் ஒப்படைக்கும் சூழ்ச்சியை மேற்கொண்டு வருகிறது. தொழில் நடத்துவது அரசாங்கத் தின் வேலை அல்ல என்னும் ஒன்றிய அரசின் நிலைப்பாடு, அறிவு முதிர்ச்சி பெற்ற தமிழகத்தில் இதுபோன்று நடக்க லாமா என்பதே அறிவார்ந்தோர்களின் கேள்வியாக உள்ளது. - சக்திவேல்