ஈரோடு, மே 5- தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நடு நிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் விரிவுபடுத் தப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் மண்டல ஊரக வளர்ச்சி நிறுவன வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடர்பாக தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 2 நாட்கள் பயிற்சி முகாமிற்கு ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப் படுகிறது. இத்திட்டம் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப் பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர். காலை உணவு தயார் செய்வதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தரமான முறையில் உணவு தயார் செய்தல் குறித்த பயிற்சி அளிக்கும் வகையில் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்த 189 பயிற்றுநர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பவானிசாகர் மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இதில், பயிற்றுநர்கள் நல்ல முறையில் பயிற்சி மேற் கொண்டு இத்திட்டம் திறம்பட செயல்படுவதற்கு தங்களது முழு பங்களிப்பை செலுத்த வேண்டுமென தெரிவித்தார்.