districts

img

ஈரோடு: சமூக நீதி நாள் கருத்தரங்கம்

ஈரோடு, செப்.26- பெரியார் பிராமணர்களின் எதிரியா? என்ற நூல் வெளியீட்டு விழா ஈரோட்டில் நடை பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் -  கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஈரோட்டில் சமூகநீதி நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சோழ.நாகராஜன் எழுதிய “பெரியார் பிராமணர்களின் எதிரியா?” என்ற நூல் அறி முகக்  கூட்டமும் நடைபெற்றது. இவ்விழா விற்கு தமுஎகச  ஈரோடு மாவட்ட  தலைவர்  மு.சங்கரன்  தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சரிதா ஜோ வரவேற்றார். தமிழ்நாடு மக்கள் உரிமைப்  பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி  வாழ்த்து ரையாற்றினார். “பெரியார் பிராமணர்களின் எதிரியா?” என்ற நூல்  குறித்த அறிமுகத்தை, தமுஎகச மாவட்ட  செயலாளர் கலைக்கோ வன் செய்து வைத்தார்.  நூலாசிரியர்  எழுத்தா ளர் சோழ. நாகராஜன் ஏற்புரையாற்றினார். நிறைவாக, தமுஎகச மாநிலப் பொதுச்செய லாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்புரையாற்றி னார். மாவட்டக்குழு உறுப்பினர் ரவிச்சந்தி ரன் நன்றி கூறினார்.