ஈரோடு, ஏப். 13- அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ‘சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப். 14 ஆம் தேதியன்று ‘சமத்துவ நாளாக” அனுசரிக்க அரசாணை வெளியிடப்பட்டு, அதன்படி, சமத்துவ நாள் உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏற்க வேண்டும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். அனைத்துத் துறை அரசு அலுவலர்களும், ‘சமத்துவ நாள்” உறுதி மொழியான, சாதி வேறுபாடுகள் ஏது மில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காணமாட்டேன், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழு வதும் கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி ஏற்கிறேன் என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகமது குதுரத்துல்லா (பொது) உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டனர்.