districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பொதுத்தேர்வு முடிந்தது – மாணவர்கள் உற்சாகம்

பொதுத்தேர்வு முடிந்தது – மாணவர்கள் உற்சாகம் உதகை,மார்ச் 23- பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வெள்ளியன்று முடிந்த நிலையில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக நண் பர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடு திரும்பினர்.  தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த 1 ஆம்  தேதியன்று தொடங்கின. நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும்  தனியார் பள்ளிகளில் மொத்தம் 85 பள்ளிகளை சேர்ந்த 2,820  மாணவர்கள் மற்றும் 3,338 மாணவிகள் என மொத்தம் 6,158  மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத தகுதியானவர்க ளாக அறிவிக்கப்பட்டனர். இதன்படி தமிழ் முதல் தாள் தேர்வுடன் தொடங்கி கடைசி  தினமான வெள்ளியன்று நடந்த உயிரியல், தாவரவியல், வர லாறு, வணிக கணிதம், பொது மின்னணுவியல், பொது இயந் திரவியல் மற்றும் அலுவலக மேலாண்மை தேர்வு எழுத மொத் தம் 3085 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் கடைசி தேர்வு  எழுதிவிட்டு மாணவ, மாணவிகள் உற்சாகமாக வெளியே வந் தனர். மேலும் நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரியாவி டையுடன் வீடு திரும்பினர். மேலும் ஒருவர் மீது ஒருவர் பேனா  மை தெளித்து விளையாடினர். மேலும் நண்பர்களுடன் செல்பி  எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், கடைசி  நாள் தேர்வு எளிதாக இருந்தது. மேலும் ஒரு சில தாள்களை  தவிர எல்லா தேர்வுகளும் எளிதாக இருந்தது. இதனால் 12 ஆம்  வகுப்பு தேர்வில் ஒட்டுமொத்தமாக நல்ல மதிப்பெண் கிடைக் கும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் கல்லூரிக ளில் சேர்வதற்கு தேவையான வேலையில் ஈடுபட உள்ளோம்  என்றனர்.

29 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

29 கிலோ தங்க நகைகள் பறிமுதல் நாமக்கல், மார்ச் 23- ராசிபுரம் அருகே வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 29  கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறி முதல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இத னால் ஒவ்வொரு முக்கிய சாலைகளிலும் தேர்தல் பறக் கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின் றனர். இந்நிலையில், சேலத்தில் இயங்கி வரும் ஒரு பிர பலமான நகைக்கடையில் இருந்து பல்வேறு மாவட் டங்களுக்கு, நகை ஆபரணங்கள், பெட்டி பெட்டியாக கொண்டு செல்லப்பட்டது. ராசிபுரம் அடுத்துள்ள மல்லூர்  அருகே அமைக்கப்பட்ட சோதனைச்சாவடியில், நாமக்கல்  மாவட்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையின் போது, நகைகள் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தினை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அளவுக்கு அதிகமான நகைகள் இருந்ததால், விசாரணைக்காக பறிமுதல் செய்து ராசிபுரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு ஆஜர்படுத்தினர். நகைகள் அனைத்தும் உரிய  ஆவணங்களுடன் தனியார் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் முகமையோடு கொண்டு செல்லப்பட்டது. இருந்த போதி லும் அதிக அளவில் கொண்டு செல்லப்பட்டதால் தேர்தல் பறக் கும் படையினர் உரிய விசாரணை நடத்துவதற்காக அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்ற னர்.

பொள்ளாச்சி தொகுதி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

உடுமலை, மார்ச் 23– பொள்ளாச்சி நாடாளுமன்றத்தில் வேட் பாளராக போட்டியிடும் திமுகவின் கே. ஈஸ்வரசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.  இந்திய கூட்டணியின் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமியை அறிமுகம் செய்யும் செயல்வீரர்கள் கூட்டம் உடுமலை பழனி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் 23ஆம் தேதி சனியன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு திமுக மாவட்ட அவைத்தலை வர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித் தார். பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக பொறுப்பாளர் அமைச்சர் அ.ர.சக்கர பாணி மற்றும் அமைச்சர்கள் மு.பெ.சாமிநா தன், கயல்விழி செல்வராஜ், திமுக தலைமை  கழக நிர்வாகி பூச்சிமுருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் மற்றும் கூட்டணி கட்சி யின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு சென்னை, மார்ச் 23- திருப்பூர், அவிநாசியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், நாட்டில் ஓடும் வாகனங் கள் எல்லாம் கட்டணம் செலுத்தி பர்மிட் பெற்றும், சாலை வரி செலுத்தியும் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே, தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள கட்டணச்சாவடிகளில் வாகனங்களுக்கு உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார். கட்டணம் வசூலிப்பதற்கு தேசிய  நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கும் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008 எனும் சட்டத்தின் கட்டண  சேகரிப்பு 6-ன் உட்பிரிவுகள் 1,2,3,5,6,7 ஆகியவை செல்லாது  என அறிவிக்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளார். இந்த  மனுமீதான விசாரணை சமீபத்தில் தலைமை நீதிபதி தலைமை யிலான முதன்மை அமர்வில் நடைபெற்றபோது, தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தின் சார்பிலும், மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பிலும் இரண்டு வழக் கறிஞர்கள் ஆஜரானார்கள். ஒன்றிய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால் வழக்கு விசா ரணை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நி லையில், திமுகவின் தேர்தல் அறிக்கையில், தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள கட்டண சாவடிகள் அகற்றப்படும் என்று  அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று மனுதாரர் கூறி யுள்ளார்.

வாக்குச்சாவடி அலுவலர்களாக 6 ஆயிரம் பேர்

நாமக்கல், மார்ச் 23- நாமக்கல் மாவட்டத்தில் மக்களவை தேர்தல் வாக்குச் சாவடி பணியில் 6,512 அலு வலர்கள் நியமிக்கப்பட்டு, குலுக்கல் முறையில் பணியி டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில்,  மக்களவைத் தேர்தலை யொட்டி 6 சட்டமன்ற தொகுதி களில் உள்ள வாக்குச்சாவடி களில் தேர்தல் பணியாற்றுவ தற்கான அலுவலர்கள், பணி யாளர்கள் கணினி மூலம் சுழற்சி அடிப்படையில் முதற் கட்டமாக தேர்வு செய்யும்  பணி நடைபெற்றது. மாவட்ட  தேர்தல் அலுவலரும், ஆட் சியருமான ச.உமா இதனைத்  தொடங்கி வைத்து கூறுகை யில், மக்களவை தேர்தலை யொட்டி, 6 சட்டமன்ற தொகு திகளில் 1,628 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள் ளன. வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து  அடிப்படை வசதிகளும் நிறை வேற்றும் வகையில், அலுவ லர்கள் மூலம் பணிகள் நடை பெற்று வருகின்றன. அதன் படி வாக்குச்சாவடி மையங் களில் தேர்தல் நாளான ஏப்.19 ஆம் தேதியன்று பணியாற்ற ஒவ்வொரு வாக்குச்சாவடிக ளிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் மூன்று  நிலைகளிலான வாக்குச் சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மொத்தம் 1,628 வாக்குச்சாவடிகளுக்கு 6,512 அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மேலும், கூடுதல் அலுவ லர்களாக 20 சதவிகிதம் அதா வது 1,304 அலுவலர்கள் என  மொத்தம் 7,816 பேருக்கு  கணினி மூலம் சுழற்சி முறை யில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என் றார். இந்நிகழ்ச்சியில், வரு வாய் அலுவலர் ரெ.சுமன், தேர்தல் வட்டாட்சியர் திரு முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.