districts

குறைந்தபட்ச சட்டக்கூலி வழங்குவதை உறுதிப்படுத்திடுக

கோவை, மார்ச் 20- தங்நகை பட்டறைகளில் பணியாற் றும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச சட்டக்கூலியை வழங்குவதை உறுதிப்படுத்தி, மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என சிஐ டியு கோயம்புத்தூர் தங்கநகை தொழிலாளர் யூனியன் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியரிடம் அச்சங்கத்தின் தலை வர் என்.எம்.கண்ணன், பொதுச்செய லாளர் பி.சந்திரன், பொருளாளர் மதுர வேல், சிஐடியு மாவட்ட பொருளாளர்  ஆர்.வேலுசாமி, மாவட்ட நிர்வாகி எம்.கே.முத்துகுமார் ஆகியோர் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித் திருப்பதாவது, கோவையில் பாரம் பரியமாக தங்க நகை தொழில் செய்து வரும் பட்டறைகள் உள்ளது. இங்கு  30க்கும் மேற்பட்ட எக்ஸ்போர்ட் நிறு வனங்கள், 1000 மேற்பட்ட உற்பத்தி யாளர்களும் செயல்படுகின்றனர். இதில் குறைந்த கூலிக்கு பெண்கள், மற்றும் வட மாநில தொழிலாளர் களையும் வேலை வாங்கப்படுகின் றனர். 12 மணி நேரம் வேலை வாங்குவ தோடு, குறைந்தபட்ச கூலியை கூட சட்டப்படி வழங்குவது கிடையாது. இதுகுறித்த விசாரணைகளை மேற் கொண்டு,மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு குறைபாடுகளை தீர்க்க வேண் டும். குறைந்தபட்ச ஊதியத்தை அமல் படுத்த வேண்டும். இரு பாலருக்கும் 21 ஆயிரம் சம்பளம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். பட்டறை தொழில்களுக்கு சலுகை கட்டணத் தில் மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 

அடிப்படை வசதிகள்: சிபிஎம் முறையீடு

ஈரோடு மாநகரம், 30 ஆவது வார் டுக்குட்பட்டது திண்டல், காரப்பறை. இப்பகுதியில் பாதாள சாக்கடைக் காக தோண்டப்பட்ட சாலைகளை சீர மைக்க வேண்டும். காரப்பாறை, புது காலனி, பிகேஎன் நகர், மெடிக்கல் நகர், பங்காரு நகர் ஆகிய பகுதி களில் சாக்கடை வசதி அமைக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள 5 மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைத்து சுத்தப்படுத்த வேண்டும். பெண்கள் கழிப்பறையை பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என ஈரோடு மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயலா ளர் குப்புசாமி தலைமையில் மேயர் நாகரத்தினத்திடம் மனு அளித்தனர்.  இதில், தாலுகா செயலாளர் என்.பால சுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப் பினர் பா.லலிதா, என்.பழனிசாமி, மாதையன், ரவி, உள்ளிட்டோர் உட னிருந்தனர்.

வீட்டுமனை கேட்டு விதொச மனு

தருமபுரி மாவட்டம்‌, பென்னா கரம்‌ வட்டம்‌, கலப்பம்பாடி ஊராட்சிக் குபட்ட தளி அள்ளி, கோணல்பட்டி பகுதியில் ஏராளமான ஏழை மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விவசாய நிலம் இல்லை தினக்கூலி தொழிலாளர்களாக வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இத னால் கூலி செய்யும் வருவாய் அன் றாட வாழ்க்கை நடத்தவே பற்றாக் குறையாக உள்ளது. ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.எனவே வீடு இல்லாத தளிஅள்ளி, கோடல்பட்டி கிராம மக்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.