கோவை, டிச.8- கேங்மேன் பணி வரன்முறை குறித்து மண்டல தலைமைப் பொறியா ளரின் தன்னிச்சையான உத்தரவை ரத்து செய்யகோரி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் கோவை யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கேங்மேன்கள் பணி சம்மந்த மாக வாரிய உத்தரவுகளை நடைமு றைப்படுத்த வேண்டும். கேங்மேன் பணி வரன்முறை குறித்து மண்டல தலைமைப் பொறியாளரின் தன்னிச்சை யான உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கேங்மேன் பணியாளர்க ளின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். பாதுகாப்பாக பணி செய்திட தேவையான அனைத்து உபகரணங்கள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கோவை டாடாபாத் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு வியா ழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் டி.மணிகண்டன் தலைமை ஏற்றார். கோரிக்கைகளை விளக்கி மண்டல செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட் டத்தைதொடர்ந்து, மின்வாரிய கோவை மண்டல தலைமைப் பொறியாளர் குப்புராணியை நேரில் சந்தித்து சிஐடியு நிர்வாகிகள் கோரிக்கை மனுவினை அளித்தனர். இதில், கோவை மாநகர் தலைவர் வீ.மதுசூதனன், பொருளாளர் ஏ.சாதிக் பாட்ஷா மற்றும் நீலகிரி, உடுமலை, பல்லடம் வட்ட கிளைகளைச் சார்ந்த திரளான மின் ஊழியர்கள் பங்கேற்ற னர்.