கீழ்பவானி வாய்க்கால் மீண்டும் திறப்பு
ஈரோடு, டிச. 24- கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு சரி செய்யப்பட்டு, மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கரூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பவானிசாகர் அணையின் மூலம் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆகஸ்ட் முதல் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கடந்த டிச. 10ஆம் தேதியன்று ஈரோடு அருகே உள்ள வாய்க்கால் மேடு என்ற இடத்தில் கால்வாய் கரை உடைப்பு ஏற்பட்டது. இதனால் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின. இதனையடுத்து கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. அப்பகுதிக்குச் சென்று கால்வாய் உடைப்பு மற்றும் பாதிப்புகளை பார்வையிட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி விரைந்து சீர மைப்பு பணிகளை முடிக்க உத்தரவிட்டார். இதன்படி கட்டு மான பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் முடிவுற்ற நிலை யில் சனியன்று அணையில் இருந்து வாய்க்காலில் பாசனத் திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் உடைபட்டு சரி செய்யப்பட்ட பகுதியில் தண்ணீர் வந்தடைந்ததை அமைச்சர் முத்துசாமி பார்வை யிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த 10 நாட்களாக இரவு, பகலாக பணிகள் மேற்கொள்ளப் பட்டு முடிவடைந்துள்ளது. பாசனத்திற்காக வாய்க்காலில் 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக 2000 கன அடியாக உயர்த்தப்படும். தண்ணீர் கடை மடைக்கு மூன்று நாட்களுக்குள் சென்றடையும். மேலும், தேவைக்கு ஏற்ப நீர் திறப்பின் நாட்கள் நீட்டிக்கப்படும் என தெரிவித்தார்.
திருப்பூர் தொழில் நெருக்கடியால் கட்டுமான தொழில் குறைந்துவிட்டது: பொறியாளர்கள் தகவல்
திருப்பூர், டிச. 24 - திருப்பூர் பின்னலாடை தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் கட்டுமான தொழில் குறைந்து உள்ளதாக சிவில் இன்ஜினியர்கள் கூறினர். திருப்பூர் பின்னலாடை தொழில் நன் றாக நடைபெறும் போது கட்டுமானத் தொழி லும் அதிக அளவில் நடைபெறும். ஆனால், தற்போது பின்னலாடை தொழில் நெருக்க டியை சந்தித்து வரும் நிலையில், கட்டுமானத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று திருப்பூர் சிவில் இன்ஜினியர்கள் சங்கத் தலைவர் சௌ.ஸ்டாலின்பாரதி கூறினார். குறிப்பாக பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, கொரோனா பொது முடக்கம் மற் றும் மூலப் பொருட்கள் விலை உயர்வு என அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்சனைகளால் கட்டு மானத் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட் டது. எனினும் தற்போது பாதிப்பின் கடுமை அதிகமாக உள்ளது. உதாரணத்திற்கு கட்டு மான பொறியாளர்களை ஏபிசி என மூன்று வகையாக பிரித்தால், முதல் வகையினர் ஆண்டுக்கு சராசரியாக 50 கட்டிடங்கள் வரை கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள், தற் போது சுமார் 20 கட்டடங்கள் என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. அடுத்த வகையில் சுமார் 20 கட்டிடங்கள் கட்டியவர்கள் தற்போது 5 அல்லது 6 கட்டிடங்கள் கட்டக்கூடிய நிலை யில் உள்ளனர். ஐந்து கட்டடங்கள் வரை கட்டி யவர்கள் ஒன்றிரண்டு கட்டிடங்கள் என்ற அள வுக்கு குறைந்துவிட்டது. தொழிற்சாலைகள், வணிக கட்டிடங்கள் மற்றும் வீடுகள் என்ற மூன்று பிரிவிலுமே கட்டுமான பணி குறைந்துவிட்டது. குறிப் பாக தொழிற்சாலைகள் கட்டிடங்களும் வணிக கட்டிடங்களும் வெகு அளவிற்கு குறைந்து விட்டது. கட்டிட வரன்முறை காரணமாகவும் புதிய கட்டிடங்கள் கட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள் ளது. நகர வளர்ச்சி குழுமம் முன்பு சென்னை யில் மட்டும் இருந்தது. ஆனால் கட்டிட வளர்ச்சி அதிகமாக இருக்கும் பகுதிகள் என்ற முறையில் கோவை, மதுரை, ஓசூர், திருப்பூர் ஆகிய நான்கு இடங்களிலும் நகர்ப்புற வளர்ச்சி குழுமம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டிடங்களுக்கான வரன்முறை விதிகள் கடு மையானதாக இருப்பதாலும் புதிதாக கட் டடம் கட்டுவோருக்கு சிரமம் ஏற்படுகிறது. பொதுவாகவே பல்வேறு பகுதிகளிலும் கட்டுமான தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனினும் பிற பகுதிகளை விட தொழில் வளர்ச்சி வெளிப்படையாக தெரி யக்கூடிய திருப்பூரில் தற்போது பாதிப் பின் தன்மையும் வெளிப்படையாக தெரிகி றது என்று சிவில் இன்ஜினியர்கள் தெரிவித் தனர்.
அணைகள் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:48.60/60அடி
நீர்வரத்து:95கன அடி
வெளியேற்றம்:27கன அடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 89.11/90அடி.
நீர்வரத்து:376கனஅடி
வெளியேற்றம்:513கன அடி
ஆன்லைன் வணிக சேவை குறைபாட்டிற்கும் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிடலாம்
திருப்பூர், டிச. 24 - சமீப காலங்களாக அதிகரித்து வரும் இணைய வழி வர்த்தகங்களால் நுகர்வோர் குறைகளும் அதிகரித்து வருகிறது. இதற்கும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் மூலம் தீர்வு களைப் பெற முடியும் என்று நுகர்வோர் நலப் பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் 1986ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற் றப்பட்டு அமலுக்கு வந்தது. அதன் அடிப்ப டையில் தான் ஆண்டுதோறும் டிசம்பர் 24ஆம் தேதி நுகர்வோர் உரிமைகள் நாள் கடைப்பி டிக்கப்படுகிறது. இந்த சட்டம் நுகர்வோருக்கு ஆறு உரி மைகளை வழங்குகிறது. பொருட்களை தேர்வு செய்யும் முறை, அனைத்து வகை யான அபாயகரமான பொருட்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவதற்கான உரிமை, அனைத்து வகையான பொருட்களின் தரம் மற்றும் செயல்பாடு பற்றி தெரிந்து கொள்வ தற்கான உரிமை, நுகர்வோர் நலன்கள் தொடர்பான அனைத்து முடிவெடுக்கும் நடை முறைகளிலும் கேட்கப்படும் உரிமை, நுகர் வோர் உரிமைகள் மீறப்படும்போது அதற்கு தீர்வு பெறுவதற்கான உரிமை, நுகர்வோர் கல்வியை நிறைவு செய்வதற்கான உரிமை ஆகியவை ஆகும். இந்த சட்டத்தின் அடிப்படையில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறுவப்பட்டு செயல் பட்டு வருகிறது.
இந்த சட்டம் அமலுக்கு வந்த திலிருந்து இந்தியா முழுவதும் தற்போது வரை 54 லட்சத்து 85 ஆயிரத்து 267 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நுகர்வோர் குறை தீர் ஆணையங்களில் பதிவு செய்யப்பட்டதில் 90 சதவிகித புகார்களில் தீர்வு காணப்பட்டுள் ளது. இந்த சட்டத்தின் கீழ் நுகர்வோர் பெறும் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள், புகார்கள் இருந்தால் நுகர் வோர் குறைதீர் ஆணையம் மூலம் இழப்பீடு பெற முடியும். பொருட்கள் என்றால் மொத்த மாக அல்லது சில்லறையாக கடைகளில் வாங்கப்படும் நிறைவு செய்யப்படும் பொருட் களின் ஏற்படும் குறைபாடு. சேவைகள் என் றால் போக்குவரத்து, மருத்துவம், வங்கி மற் றும் காப்பீடு சேவைகள் போன்று ஒரு தனி நபரிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமி ருந்தோ நுகர்வோர் கட்டணம் செலுத்தி பெறும் சேவைகளைக் குறிப்பது. ஒரு குறை எழுந்து இரண்டு ஆண்டுகள் வரை புகார் பதிவு செய்யலாம். இரண்டு ஆண்டுகளைக் கடந்த புகார்கள் விசார ணைக்கு ஏற்றுக் கொள்ளப்படாது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-இன் கீழ் பதிவு செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்ப டும் புகார்கள் 90 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும். புகார் பதிவு செய்வதற்கு முன்பாக பாதிக் கப்பட்டவர் எதிர்தரப்புக்கு தங்களுடைய குறைகளையும் அதற்கு அவர்கள் கோரும் தீர்வுகளையும் விவரித்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நுகர்வோர் ஆணையத்திற்கு செல்வதற்கு முன்பாக பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு பெறுவதற்கான முயற்சி இது. புகாருக்கு பதில் வரவில்லையென் றால் நுகர்வோர் சட்டத்தின் கீழ் உரிய நுகர் வோர் குறைதீர் ஆணையத்தில் போதிய ஆதாரங்களுடன் புகார் பதிவு செய்யலாம். ரூ. 1 கோடி வரை இழப்பீடு கோரும் புகார் களை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணை யத்தில் பதிவு செய்ய வேண்டும். ரூ. 1 கோடியி லிருந்து 10 கோடி வரை இழப்பீடு கோரும் புகார்களை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ரூ. 10 கோடிக்கும் மேல் இழப்பீடு கோரும் புகார் களை தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணை யத்தில் பதிவு செய்ய வேண்டும். அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (எம்.ஆர்.பி) குறிப்பிடாமல் பொருட்களை விற்பது, எம்.ஆர்.பிக்கு அதிகமாக பொருட் களை விற்பது, குறிப்பிட்ட சேவைகளை சரி வர வழங்காமல் இருப்பது, காப்பீடு நிறுவ னங்கள் சரியாக காப்பீடு வழங்காமல் இருப் பது, தனியார் மருத்துவ சேவைகளில் எழும் குறைகள், வங்கி பரிவர்த்தனைகளில் ஏற்ப டும் புகார்கள் எனப் பல தரப்பட்ட புகார் களுக்கு நிவாரணம் பெற முடியும். சிறிய தொகையிலிருந்து எவ்வளவு 0பெரிய தொகையாக இருந்தாலும் நுகர் வோர் இழப்பீடு பெற முடியும். உரிய ஆதாரங் களுடன் புகார் செய்தால் நிச்சயம் இழப் பீடு பெற முடியும். புகார் செய்பவரே இதில் தனக்காக வாதாடவும் முடியும். ஆனால் மக் கள் இதற்காக பெரும்பாலும் மெனக்கெடு வதில்லை. பல்வேறு சம்பவங்களில் நுகர்வோர் குறைகளுக்காக வாதாடி அதற்கு உரிய இழப்பீடும் பெற்றிருக்கிறார்கள். சமீப காலங் களாக அதிகரித்து வரும் இணைய வழி வர்த்த கங்களால் நுகர்வோர் குறைகளும் அதிக ரித்து வருகிறது. இதற்கும் நுகர்வோர் குறை தீர் ஆணையம் மூலம் தீர்வுகளைப் பெற முடியும். அரசாங்கமும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை பெரிய அளவில் முன் னெடுக்க வேண்டும், என்று நுகர்வோர் பாது காப்பு அமைப்பினர் கூறினர்.
மரவள்ளி பயிருக்கு காப்பீடு
நாமக்கல், டிச.24- புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத் தின் கீழ், மரவள்ளி பயிருக்கு காப்பீடு செய்யுமாறு விவசாயி களுக்கு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து நாமக்கல் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பருவ மழை மற்றும் இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதன்பின் பயிர் காப்பீடு செய்ய இயலாத நிலை ஏற்படலாம். புதுப்பிக்கப்பட்ட பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-2023-ஆம் ஆண்டு ரபி பருவத்தில் மர வள்ளி பயிருக்கு காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் வட்டாரத்தில் மரவள்ளி பயிர் சாகுபடி செய் துள்ள விவசாயிகள், வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சுய விருப் பத்தின் பேரில் காப்பீடு பிரீமியம் தொகை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.தேவைப்படும் ஆவணங்கள் ஆதார், சிட்டா அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பதிவுக் கட்டணம் ஆகியவற்றுடன் ஏக்கருக்கு பிரீமியத் தொகையாக ரூ. 1,541.28-ஐ செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்து கொள்வதற்கு ஜன. 31-ஆம் தேதி கடைசி நாள் என தெரி விக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
சேலம், டிச.24- நாமக்கல் மாவட்டம், சாணார்பாளையம் பகுதி யைச் சேர்ந்த கூலித் தொழி லாளிகள் டி.கார்த்தி மற் றொரு கார்த்தி, சுரேஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம் பட்டி காவிரி ஆற்றில் குளிப் பதற்காக வெள்ளியன்று மாலை சென்றுள்ளனர். அப் போது மூவரும் ஆற்றில் குளித் துக்கொண்டிருந்தபோது கார்த்தி (26) எதிர்பாரதவித மாக நீரில் மூழ்கிவிட்டார். நீரில் மூழ்கிய அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரா ததால், அவரை இரவு முழுவ தும் நண்பர்கள் தேடினர். ஆனாலும், அவர் கிடைக்க வில்லை. இதையடுத்து காவல் துறையினருக்குத் தக வல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் சனியன்று காலை அவ ரது சடலத்தை காவல் துறை யினர் மீட்டு, பிரேத பரிசோ தனைக்காக மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
அண்ணாமலைக்கு சிறந்த ஆடு மேய்ப்பர் பட்டம்
கார்த்திகேய சிவசேனாதிபதி கிண்டல்
திருப்பூர், டிச. 24 - பாஜக மாநில தலைவர் அண்ணா மலைக்கு சிறந்த ஆடு மேய்ப்பர் (குட் ஷெப் பர்ட்) பட்டம் வழங்குவதாக புலம்பெயர் தமி ழர் நல வாரிய தலைவராக பொறுப்பேற் றுள்ள கார்த்திகேய சிவசேனாதிபதி கூறி னார். தமிழக அரசின், புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு சனியன்று காங்கேயம் வந்த கார்த்திகேய சிவசேனாபதிக்கு திமுகவினர் உற்சாக வர வேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர் களிடம் கார்த்திகேய சிவசேனாதிபதி கூறு கையில், அண்ணாமலை ஜோசியரை பார்த்து விட்டு பில் கொடுப்பார் போல! இதற்கென்ன நேரம், காலமா பார்ப்பார்கள், பில் இருந்தால் கொடுக்க வேண்டியது தானே? தேசபக்தி என்பது அயோக்கியனின் கடைசி புகலிடம் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்த கருத்தை மேற்கோள் காட்டிய அவர், அண்ணாமலை கட்டி உள்ள வாட்ச் விலை ரூ.5 லட்சம், 12 லட்சம் என்கிறார் கள். 125 ஆடுகள் விற்றால் தான் இந்த வாட்ச் வாங்க முடியும். நம்மூர் உள்ள நிலையில் அவ்வளவு பிரமாதமாக இவர் ஆடு மேய்த் திருந்தால் அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தால் நாங்கள் வாட்ச் வாங்கா விட்டாலும், புள்ளை, குட்டிகளை பார்த்துக் கொள்வோம். சிறப்பாக ஆடு வளர்த்த அண்ணாமலைக்கு கிருஸ்துமஸை முன்னிட்டு, சிறந்த ஆடு மேய்பர் (குட் ஷெப் பர்ட்) என்ற பட்டத்தை வழங்குகிறேன் என கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்தார். மேலும், கீழ் பவானி வாய்க்காலில் கான்கி ரீட் போடும் திட்டத்தில் பாஜகவினர் முன்னுக் குப்பின் முரணாக பேசி குழப்பத்தை ஏற்ப டுத்தி வருகின்றனர். கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை ரத்து செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் எனவும் அவர் தெரிவித்தார்.
அதிகாரிக்கு பொருந்தும் ஓய்வு பெறும் வயது, தொழிலாளிக்கு பொருந்தாதா!
ஈரோடு, டிச.24- தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தில் அதிகாரிக்கு பொருந்தும் ஓய்வு பெறும் வயது, தொழிலாளிக்கு பொருந்தாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு பஞ்சாலை கழகம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான விசைத்தறி கூடங்கள் ஈரோடு மாவட்டம், சிவகிரியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது கொரோனாவால் 58லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. இது அதிகாரிகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும், தொழிலாளர்களுக்கு பொருந்தாது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகிரியில் இயங்கும் விசைத்தறி கூடத்தில் பணியாற்றி வந்த அப்துல் ரசீத் கடந்த 31.5.2022ல் 58 வயதில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய ஆவணங்களுடன் நிர்வாகத்திடம் முறையிட்டும் வேலை அளிக்கப்படவில்லை. இந்நிலையில், மதுரை உயர்நீதி மன்றத்தில் ஆணை பெற்ற மற்றொரு தொழிலாளிக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை உயர்நீதிமன்ற பரிந்துறையின்படி, தனக்கும் வேலை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசருக்கு மனு அனுப்பியுள்ளார். இதில் கடந்த 6 மாதங்களாக வேலையின்றி மிகவும் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.