சேலம், ஏப்.20- சாதி ஆணவப்படுகொலையை தடுக்க தமிழ்நாடு அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தமிழகம் முழுவ தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ் ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சுபாஷ் - அனுஷ்யா தம்பதியினரை, சுபாஷின் தந்தை தண்டபாணி கொலைவெறி தாக்கு தலில் ஈடுபட்டார். இந்த சாதிய வன்மத்தோடு நடைபெற்ற ஆணவக்கொலையில், சம்பவ இடத்திலேயே சுபாஷ் மற்றும் அவரது பாட்டி ஆகியோர் பலியாகினர். பல போராட் டங்களுக்குப் பின்பு பலத்த காயங்களுடன் அனுசியா உயிர் தப்பினார். தற்போது அனு சியா சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ஆணவப்படுகொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என தொடர்ந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலை யில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியுள் ளது. இந்த சூழலை கருத்தில் கொண்டாவது, தமிழ்நாடு அரசு உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநி லம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக, சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், மாவட்ட தலைவர் ஆர்.குழந்தைவேல் தலைமை ஏற்றார். தில் அமைப்பின் மாவட்ட செயலாளர் வி. இளங்கோ பாதிக்கப்பட்ட அனுசுயாவின் பெற் றோர், சகோதரர் மற்றும் சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா, மேற்கு மாநகர செயலாளர் எம். கனகராஜ், வடக்கு மாநகர செயலாளர் என். பிரவீன் குமார், ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தேவி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ. ஞானசௌந்தரி, சிஐடியு மாவட்ட துணை செயலாளர் சி.கருப்பண்ணன், இந்திய மாண வர் சங்க மாவட்ட தலைவர் அருண் குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
தருமபுரி
தருமபுரி தொலைபேசி நிலைய அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் டி.மாதையன் தலைமை ஏற்றார். இதில், மாநில துணைத்தலைவர் ஜி. ஆனந்தன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி, வே.விசுவநாதன், சிஐடியு மாவட்ட செயலாளர் பி.ஜீவா, விதொச மாவட்ட செயலாளர் எம்.முத்து, சிறுபான்மை நலக் குழு எஸ்.கிரைஸாமேரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம். அருள்குமார் ஆகியோர் உரையாற்றினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் பி.ஜெயராமன், மாவட்ட பொருளா ளர் கே.கோவிந்தசாமி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
கோவை
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பில், கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் வழக் கறிஞர் ஆறுச்சாமி தலைமை ஏற்றார். இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் யு.கே.சிவஞானம், சிஐ டியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, மாதர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் வழக்கறிஞர் சுதா, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அசாருதீன் ஆகி யோர் உரையாற்றினர். இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜோதி குமார், உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார், சமூக நீதி அறக் கட்டளை பொறுப்பாளர் கவுசல்யா, மாணவர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
ஈரோடு
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஈரோடு, சூரம்பட்டி நால்ரோடு பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணைத்தலைவர் என்.பாலசுப்பிரமணி தலைமை ஏற்றார். இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் மா. அண்ணாதுரை, விதொச மாவட்ட தலைவர் கே.ஆர்.விஜயராகவன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வி.ஏ. விஸ்வநாதன் உள்ளிட்டோர் உரையாற்றி னர். இதில், திரளானோர் கலந்து கொண்ட கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். முடி வில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நகர செயாளர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.