உதகை, ஏப்.8- தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து, நீலகிரி மாவட்டத்தில் ரேசன் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு தேவை யான அரிசி, பருப்பு, பாமாயில் உள் பட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில், நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத் திற்கு ரேசன் கடைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர் சங்க மாநில தலை வராக ஜெய் சந்திர ராஜா உள்ளார். இவர் மீது சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டியதில், அவர் படுகாயமடைந்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீதான தாக்குதல் இது இரண்டாவது முறையாகும். இதனையடுத்து, நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவரை அடிக்கடி அடை யாளம் தெரியாத நபர்கள் தாக்குவ தால், இதனை கண்டித்து ஊழியர் கள் போராட்டத்தில் இறங்கி யுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது விரைவாக நடவ டிக்கை எடுக்க வேண்டும். தாக்கு தலில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என ரேசன் கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடை களை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், நீலகிரி மாவட்டத் திலும் சுமார் 400 ரேசன் கடைகள் மூடப்பட்டு இருந்தது. ஊழியர் களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத் தனர். இந்த நிலையில், ரேசன் கடை கள் அடைப்பு குறித்து தெரியாத பொதுமக்கள் ஒரு சிலர் ரேசன் கடைகளுக்கு வந்து விட்டு பொருட் கள் வாங்க முடியாமல் ஏமாற்றத் துடன் திரும்பி சென்றனர்.