districts

img

உயர் அதிகாரிகள் பணி திணிப்பால் ஊழியர் தற்கொலை

அரசு ஊழியர்  சங்கம் ஆவேசம் திருப்பூர், ஜன. 7 - திருப்பூர் மாவட்டம், வெள்ளக ோயில் ஒன்றியத்தில் தோட்டக்கலைத் துறை அலுவலராக பணியாற்றி வந்த லோகேஷ் உயர் அதிகாரிகளின் பணித் திணிப்பு காரணமாக மன  அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை  செய்து கொண்டார். இந்த சம்பவத் துக்கு காரணமான உயரதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டம் நடத்தினர். ஐந்து பேர் செய்யக்கூடிய பணியை ஒருவரே செய்யச் சொல்லி அதிகாரி மிரட்டல் விடுத்ததால் லோகேஷ் தற் கொலை செய்து கொண்டதாக அரசு ஊழியர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். அவரது மரணத்துக்கு கார ணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப் பதுடன், தமிழக அரசு அவரை இழந்து  தவிக்கும் குடும்பத்தாருக்கு ரூ. 50 லட் சம் இழப்பீடு வழங்க வேண்டும். லோகேஷ் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு பணி வழங்க வேண்டும் என  வலியுறுத்தி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராணி தலைமை வகித்தார். உதவி  தோட்டக்கலை அலுவலர் சங்க மாநில தலைவர் மணி, வேளாண்மை பட்டதா ரிகள் சங்க நிர்வாகி சங்கர் கணேஷ், உதவி தோட்டக்கலை துறை அலுவலர் சங்க சேலம் மாவட்ட தலைவர் ஆர்.முருகன், தாராபுரம் வட்ட கிளை செய லாளர் இல.தில்லையப்பன், பல்லடம் வட்டக்கிளைச் செயலாளர் கே.ஆர்.ஆறுச்சாமி, காங்கேயம் வட்டக்கிளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். மணிவேல், மடத்துக்குளம் வட்டக் கிளைப் பொருளாளர் என்.சிவக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  மாவட்ட பொருளாளர் எஸ்.முருகசாமி  நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத் தின் நிறைவாக லோகேஷ் மறைவுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட் டது.