புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு மையங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், இச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெகநதான், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.