districts

img

மருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப மருத்துவ ஊழியர் சங்க மாநில செயற்குழு வலியுறுத்தல்

கோவை, நவ.16- கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவத் துறை நிர்வாக ஊழியர்  சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தமிழ்நாடு மருத்துவத்துறை நிர் வாக ஊழியர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் சனியன்று கோவை மாவட்டம், தாமஸ் கிளப், சிவகுமார் அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாநி லத் தலைவர் கோ.வெங்கோபராவ் தலைமை வகித்தார். முன்னாள் மாநிலச் செயலாளர் சு.பாலகிருஷ்ணன் சங்க  கொடியினை ஏற்றினார். மாநில துணைத் தலைவர் ஆர்.சிவகுமார் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கோவை மாவட்டச் செயலாளர் ப. செந்தில்குமார் துவக்க உரையாற்ற, வேலை அறிக்கையை பொதுச் செயலா ளர் நம்பிராஜனும், வரவு செலவு அறிக் கையை மாநிலப் பொருளாளர் கோ. அசோகன் ஆகியோர் முன்வைத்தனர். இக்கூட்டத்தில், நடப்பாண்டிற்கான அனைத்துநிலை நிர்வாக ஊழியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக ளும், அதற்கு முன்னதாக பணியிட மாறு தல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.  மருத்துவத்துறையில் காலியாக உள்ள 30 சதவிகிதத்திற்கும் அதிகமான நிர் வாக ஊழியர் பணியிடங்களை நிரப்ப  வேண்டும். கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரும் அனைவருக் கும் சிறப்பு நிகழ்வாக கருதி ஒரே நிகழ் வில் பணி நியமனம் வழங்க வேண்டும். புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களுக்கு நலப்பணிகள் இணை  இயக்குநர் அலுவலகமும், இதற்குரிய  அனைத்து நிர்வாக ஊழியர் பணியிடங் களும் புதியதாக உருவாக்க வேண்டும். 36 மருத்துவக்கல்லூரி மருத்துவமனை களை கொண்டு இயங்கிவரும். மருத் துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத் தில் கூடுதல் நிர்வாக ஊழியர் பணியிடங் கள் தோற்றுவிக்க வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், சங்கத்தின் மாவட்டத் தலை வர் சி.அண்ணாதுரை நன்றி கூறினார்.