districts

img

உதவித் தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடுக

பென்னாகரம், ஏப்.17-  மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை மாதம் 3 ஆயி ரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்க தருமபுரி மாவட்ட மாநாட்டில் வலி யுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான நலச் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 4 ஆவது மாநாடு பென்னாகரத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ஜி.கருவூரான் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை வாழ்த்தி மாநிலத் தலைவர் ஜான்சி ராணி, மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன், மாநிலப் பொருளா ளர் சக்கரவர்த்தி, மாநில துணைத் தலைவர் திருப்பதி, மாநிலச் செய லாளர் ஜீவா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி, வாலி பர் சங்க மாவட்ட தலைவர் ஜீவா னந்தம் ஆகியோர் உரையாற்றி னர். இதில், பென்னாகரம் பேரூ ராட்சி தலைவர் வீரமணி, துணை தலைவர் வள்ளியம்மாள், பேரூ ராட்சி கவுன்சிலர் பவுண்டேசன், சிபிஎம் பகுதி செயலாளர் ரவி, ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதில், மாற்றுத்திறனாளிகளுக் கான உதவித் தொகையை 3 ஆயிர மாக உயர்த்தி வழங்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். உயர் கல்விக்கு சலுகை வழங்க வேண் டும். தனியார் துறையில் 5 சத விகித இட ஒதுக்கீடு வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து, இரண்டாம் நாளாக நடைபெற்ற மாநாட்டில் சங்கத்தின் புதிய மாவட்ட தலை வராக கே.ஜி.கருவூரான், மாவட்ட  செயலாளராக எம்.மாரிமுத்து, மாவட்ட பொருளாளராக டி.தமிழ்ச் செல்வி உட்பட 28 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய் யப்பட்டது. மேலும், மாநாட்டில், அரசு மற்றும் தனியார் அலுவல கங்களில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர ஏதுவாக சாய்வு தளம் அமைக்க வேண்டும். மாற்றுத்திற னாளிகளுக்கு உயர் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியு றுத்தி, மே 10 ஆம் தேதி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபடுவதென முடிவு செய் யப்பட்டது.