சேலம், மார்ச் 5- மருத்துவக் காப்பீட்டு திட் டத்தை எளிமைப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற் றோர் நல அமைப்பு வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத் துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில், சேலம் மாவட் டம், திருவாக்கவுண்டனூர் பகுதி யில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில், மருத்துவக் காப்பீட்டு திட் டம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் பி.என்.பழனிவேலு தலைமை வகித் தார். இதில் கலந்து கொண்ட அமைப் பின் மாநில பொதுச்செயலாளர் கர் சன் பேசுகையில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஒரு முறையும், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழி லாளர்களுக்கு ஒரு முறையும் கையா ளப்படுவது வருத்தம் அளிக்கிறது. அரசு ஊழியர்களுக்கு மருத்துவ ப்ரீமியம் தொகையை அரசு முழு மையாக செலுத்தி விடுகிறது. ஆனால், போக்குவரத்து தொழிலா ளர்களுக்கு தனித்தனியாக தொழி லாளர்கள் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 1998 ஆம் ஆண்டு முதல் கடைப் பிடித்து வரும் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் போக்குவரத்து தொழி லாளர்கள் தொடர்ச்சியாக வஞ்சிக் கப்படுவதுடன், மன உளைச்ச லுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை எளிமைப்படுத்த தமிழக அரசு உட னடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றார். இக்கருத்தரங் கில் ஓய்வுபெற்றோர் நல அமைப் பின் மாநில துணைப்பொதுச் செயலாளர் பி.செல்வராஜ், மண்டல பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் அழகேசன், தரும புரி மண்டலத் தலைவர் கே.குப்பு சாமி, மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.கிருஷ்ணன், டி.ராஜேந்திரன் உட்பட திரளானோர் கலந்து கொண் டனர்.