districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

முறிந்து விழும் நிலையிலுள்ள காய்ந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்

முறிந்து விழும் நிலையிலுள்ள காய்ந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல் தருமபுரி, ஜூன் 28- தருமபுரி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில், முறிந்து விழும் நிலையிலுள்ள காய்ந்துபோன மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி நகராட்சிக்குபட்ட குமாரசாமிபேட்டை தியாகி தீர்த்தகிரியார் தெருவில், நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சுமார் 150க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகளும், அங்கன்வாடி பள்ளியில்  40க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பயின்று வருகின்ற னர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் உள்ள மரம் காய்ந்துள்ளது. மேலும், எந்த நேரத்திலும் முறிந்து  விழும் நிலையில் உள்ளது. பள்ளி குழந்தைகள் அப் பகுதியில் விளையாட செல்வதால், மரக்கிளைகள் உடைந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, காய்ந்து  போன மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்  என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஏரியிலிருந்து சடலம் மீட்பு: பொதுமக்கள் மறியல்

ஏரியிலிருந்து சடலம் மீட்பு: பொதுமக்கள் மறியல் நாமக்கல், ஜூன் 28- எலச்சிபாளையம் அருகே ஏரியிலிருந்து ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்ட நிலையில், உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை  மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம்,  எலச்சிபாளையம் ஒன்றியம், சத்தியநாயக்கன்பாளை யம் ஊராட்சி, பட்டங்காடு செல்லும் சாலையில் உள்ள  பெரிய ஆயக்குளம் ஏரியில் மிதந்த ஆண் சடலத்தை, தீய ணைப்புத்துறையினர் மீட்டு, காவல் துறை வசம் ஒப்ப டைத்தனர். இதையடுத்து சடலத்தை பிரேதப் பரிசோ தனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு ஊரக காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இந்நி லையில், உயிரிழந்தவர் சத்தியநாயக்கன்பாளையம் ஊராட்சி, கோவில்பாளையதைச் சேர்ந்த மணிகண்டன் (45) என்பதும், இவர் சரியாக பேச முடியாத மாற் றுத்திறனாளி என்பவதும் தெரியவந்தது. இவரது மனை வியான அறிவுக்கொடியும் மாற்றுத்திறனாளியாவார். இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். கடந்த ஒரு வாரமாக மணிகண்டன் வீட்டுக்கு வராததால், வேலை விஷயமாக வெளியூர் சென்று இருக்கலாம் என  உறவினர்கள் கருதியுள்ளனர். இந்நிலையில், ஏரியில்  இறந்து மிதந்தது மணிகண்டன் என்பது தெரியவந்த தையடுத்து, இதுகுறித்து தீவிர விசாரணை மேற் கொள்ள வேண்டும் எனக்கூறி, வியாழனன்று திருச்செங் கோடு அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறிய லில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருச் செங்கோடு ஊரக காவல் நிலைய ஆய்வாளர் தீபா தலை மையிலான காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தீவிர விசாரணை கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து,  சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கரும்பாலையிலிருந்த வேதிப்பொருட்கள் பறிமுதல்

நாமக்கல், ஜூன் 28- கரும்பாலையில் கலப்படத்திற்காக வைக் கப்பட்டிருந்த 1300 கிலோ அஸ்கா சர்க் கரை மற்றும் வேதிப்பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட் டம், கபிலர்மலை வட்டாரம், பிலிக்கல்பாளை யம் பகுதிகளில் இயங்கும் கரும்பாலையில் தனிநபர் புகாரின் அடிப்படையில், கபிலர் மலை மற்றும் பரமத்தி உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி ஆகியோர் வெள்ளி யன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சின்னாம்பள்ளி மேடு பகுதியிலுள்ள தனியார் கரும்பாலையில் கலப்படத்திற்காக வைக் கப்பட்டிருந்த 1300 கிலோ அஸ்கா சர்க்கரை மற்றும் வேதிப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். மேலும், வேதிப்பொருட்கள் மற்றும் அஸ்கா சர்க்கரைகளை கலப்படம் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. வேதிப்பொருட்களை பயன்படுத்தி கலப் படம் செய்வது கண்டறியப்பட்டால் அந்த கரும்பாலையின் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவ லர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பால் கொள்முதல் விலையைக் குறைக்கும் தனியார் நிறுவனங்கள் ஆவின் கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 28 -  தனியார் நிறுவனங்கள் பால் கொள் முதல் விலையை லிட்டருக்கு ரூ.6 வரை  விவசாயிகளுக்குக் குறைத்துள்ளன.விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை  ஈடுகட்ட விலைக் குறைப்பைத் தடுப்ப துடன், ஆவின் நிறுவனம் மூலம் பால்  கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் பரமசிவம் கூறி னார்  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது.  இதில் பங்கேற்ற விவசாயிகள் பேசி யதாவது: பாலதண்டபாணி: தமிழ கத்தில் முதன்முதலில் துவங்கப்பட்ட அமராவதி சர்க்கரை ஆலை திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது. கடந்த 2 ஆண் டுகளாக ஆலை முறையாக இயங்காத தால் விவசாயிகள் போதிய அர வைக்கு தரமுடியாமல் கடும் பாதிப்பை  சந்தித்து வருகிறார்கள். அரசிடம் கூடு தல் நிதி பெற்று ஆலையை புனரமைக்க  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பொதுத்துறை சர்க் கரை ஆலையை நம்பி பல்லாயிரக்க ணக்கிலான கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள் என ஆண்டுதோறும் பலரும் பாதிப்பை சந்தித்து வருகி றார்கள். இதன் காரணமாக தனியார் ஆலைக்கு செல்லும்போது, கடும் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை  ஏற்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவு  பெற்றாலும் கூட நில அளவைத்துறை யில் இருக்கும், அளவையர்கள் அளந்து தருவதில்லை. இது தொடர் பாக மாவட்ட ஆட்சியர் தக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். பால் உற்பத்தியாளர் சங்கச் செயலா ளர் பரமசிவம் பேசும்போது, தனியார்  நிறுவனங்கள் கடந்த சில வாரங்களில்  மட்டும் கொள்முதல் விலையை லிட்ட ருக்கு ரூ.6 வரை குறைத்துள்ளனர். இத னால் விவசாயிகள் கடுமையாக பாதிக் கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் மொத் தம் உற்பத்தியாகும் 1 கோடியே 25 லட் சம் லிட்டர் பாலில் 25 லட்சம் லிட்டர்  மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கி றது.  தனியார் நிறுவனங்கள் 1 கோடி லிட் டர் பால் கொள்முதல் செய்யும் நிலை யில் அவர்கள் விவசாயிகளை நெருக் கடிக்கு உள்ளாக்குகின்றனர். எனவே விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க ஆவின் கொள்முதலை அதிக ரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண் டார்.  மேலும், திருப்பூர் மாவட்டத்தின் பல் வேறு விவசாய பிரச்சனைகள் குறித்து  இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசா யிகள் பேசினர்.

காவிரி மாசுபடுவதைத் தடுக்கக்கோரி தீர்மானம்

ஈரோடு, ஜூன் 28- பவானி நகராட்சியில் வெளியேற்றப்ப டும் கழிவு நீரினால் காவிரி மற்றும் பவானி ஆறு மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தீர்மானம் நிறைவேறியது. ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி அலு வலகத்தில் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் சிந்தூரி இளங்கோவன்  தலைமை வகித்தார். ஆணையாளர் முன்னி லையில் நடைபெற்ற கூட்டத்தில் பவானி நக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளி யேறும் கழிவு நீர் காவிரி மற்றும் பவானி ஆறுகளில் நேரடியாக கலப்பதை தவிர்க்கும்  பொருட்டு சுத்திகரிப்பு நிலையம் ரூ.15.56 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. தேவபுரம் மயான வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. நகர்மன்ற உறுப்பினர்கள் அனை வரும் கலந்துகொண்டனர்.

மலைக்கிராமத்துக்கு நடந்து சென்ற ஆட்சியர்

நீலகிரி, ஜூன் 28- குன்னூர் அருகே வனப்பகுதியில் உள்ள  மலைக் கிராமத்துக்கு சுமார் 9கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மாவட்ட ஆட்சியர்,  பழங்குடியின மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உங் களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் உலிக்கல் பேரூராட்சிக்கு உள்பட்ட சடை யன்கோம்பை, சின்னாலக்கோம்பை உள் ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக் களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்ட றியும் நிகழ்ச்சி மாவட்ட நிா்வாகம் சார்பில் நடைபெற்றது.  இதில் பங்கேற்ற ஆட்சியர், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள  இப்பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு. அருணா அலுவலர்களுடன் ஒற்றையடி பாதையில் சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்றார். பின்னர் அங்குள்ள பழங் குடியின மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். சாலை வசதி, மின்சா ரம், குடிநீர், பாதுகாப்பான குடியிருப்புகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பழங்குடியின மக்கள் மனுக்கள்  அளித்தனர். பெறப்பட்ட மனுக்களை உரிய  முறையில் ஆய்வு செய்து விரைவில் நடவ டிக்கை எடுப்பதாக மு.அருணா உறுதியளித் தார்.

அவிநாசி சாலை மேம்பாலப்பணி போக்குவரத்து மாற்றம்

அவிநாசி சாலை மேம்பாலப்பணி போக்குவரத்து மாற்றம் கோவை, ஜூன் 28- மேம்பாலப்பணிக்காக போக்குவரத்து சாலைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை - அவிநாசி சாலை மேம்பால பணி நடைபெற்று வரு வதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி அண்ணா சிலையில் இருந்து அவிநாசி சாலை செல்லக் கூடிய வாகனங்கள் லட்சுமி மில் சந்திப்பில் இருந்து வலது புறமாக திரும்பி புலியகுளம் வழியாக ராமநாதபுரம் சந்திப்பில் இடது புறமாக திரும்பி திருச்சி ரோடு வழியாக அவி நாசி ரோட்டில் சென்று அடைலாம். அவிநாசி சாலையில் செல்லக் கூடிய வாகனங்கள் பயனியர் மில் வழியாக இடது  புறமாக திரும்பி ரயில்வே மேம்பாலம் வழியாக காந்திமா  நகர் சென்று தண்ணீர் பந்தல் எஸ் பெண்டு வழியாக டைட் டில் பார்க் சென்று அவிநாசி ரோட்டை அடையலாம். இல்லை யெனில் கொடிசியா வழியாக அல்லது காளப்பட்டி வழியாக அவிநாசி சாலை சென்று அடையலாம். சிங்காநல்லூரில் இருந்து அவிநாசி சாலை செல்பவர்கள் காமராஜர் சாலை வழி யாக செல்லலாம். சிங்காநல்லூர் சந்திப்பில் இருந்து ஒண்டிப் புதூர் எல் & டி பைபாஸ் சாலை வழியாக அவிநாசி சாலை சென்று அடையலாம். சொந்த வாகனங்களை பயன் படுத்துபவர்கள் சக்தி சாலை மற்றும் திருச்சி சாலையை வரும் இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்தி அவிநாசி சாலை யில் பீளமேடு ஹோப்ஸ் காலேஜ் பகுதிகளில் போக்குவ ரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

காலமானார்

காலமானார் பொள்ளாச்சி, ஜூன் 28- பொள்ளாச்சி தாலுகா ஊத்துக்குளி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளரும் மூத்த உறுப்பி னருமான ராமநாதன் வயது மூப்பு காரணமாக வெள்ளி யன்று காலமானார். ஏர் இந்தியா ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகியாக செயல் பட்டவர் ராமநாதன் (85). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பிடி.ரணதிவே போன்றவர்க ளிடம் அரசியல் பயிற்சி பெற்றவர். தனது இறுதிக்காலம் வரை யில், தீக்கதிர், பீப்பிள்ஸ் டெமாக்ரசி உள்ளிட்ட கட்சியின் நாளிதழ்கள் மற்றும் பிரசுரங்களை தொடர்ந்து வாசித்து வந்து ள்ளார். கட்சியின் அனைத்து நிகழ்வுகளும் முன்னின்றவர். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக வெள்ளியன்று காலமானார். இவரின் மறைவையறிந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசிரியர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசிரியர் கைது தருமபுரி, ஜூன் 28- தருமபுரி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (48). இவர், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு  நடுநிலைப்பள்ளி ஒன்றில் 3 ஆண்டுகளாக கணித ஆசியராகப் பணியாற்றி வந்தார். இவர் 17 வயது சிறுமிக்கு படிப்புக் காக உதவி செய்வதாகக்கூறி, தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதுதொடர்பாக தருமபுரி  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார ளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுமிக்கு படிப்புக்காக உதவி செய்து, அச்சூழலை பயன்படுத்தி ஆசிரியர் சரவணன், சிறுமி யிடம் தவறாக நடந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத் தனர்.

வேகத்தடைக்கு வண்ணம் பூசாத ஆணையாளருக்கு நோட்டீஸ்

உதகை, ஜூன் 28- வேகத்தடைக்கு வண்ணம் பூசாத தால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாகவும் நடவடிக்கை எடுக் காத 7 ஆவது வார்டு கவுன்சிலர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் அருகில் உள்ள காக்காதோப்பு பகுதியில் ஒருங்கி ணைந்த மாவட்ட நீதிமன்றம் உள்ளது இதை ஒட்டியுள்ள விசி காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. இந்த நீதிமன்ற வளாகத் திற்கு செல்ல ஹில்பங்க் - தமிழகம் மாளிகை சாலை வழியாக தினந்தோ றும் நூற்றுக்கணக்கில் வாகனங் கள் சென்று வருகின்றன. தமிழகம் சந்திப்பில் இருந்து விசி., காலனி வழியாக நீதிமன்றம் வரை இருந்த சாலை குண்டும் குழியுமாக இருந் தால், ஊட்டி நகராட்சி மூலம் தார்சா லையாக சமீபத்தில் மாற்றப்பட்டது.  சாலை அமைக்கும் போது 10 இடங்களில் வேகத்தடை அமைக்கப் பட்டது. ஆனால் வேகத்தடைக்கு வண்ணம் பூசாததால் அந்த வழி யாக சென்ற வாகன ஓட்டிகள் விபத் தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் வேகத்தடை இருப்பது குறித்து அறிவிப்பு பலகையும் இல்லை. எனவே அறிவிப்பு பலகை வைத்து வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து நமது நாளிதழிலும் செய்தி வெளியா னது. ஆனால் நகராட்சி நிர்வாகம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே நகராட்சி நிர்வாகத்தின் இந்த செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரி வித்து, மக்கள் சட்ட மைய இயக்கு னரும், வழக்கறிஞருமான விஜயன் ஊட்டியில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் துள்ளார். இந்த மனு மீதான விசார ணைக்காக வரும் 28ஆம் தேதியன்று ஊட்டி நகராட்சி ஆணையாளர், தலைவர் மற்றும் 7ஆவது வார்டு கவுன்சிலர் ஆகியோர் நீதிமன்றத் தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கு மாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவி டப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக்கல் கடைகள் மீது வழக்கு 

எலக்ட்ரிக்கல் கடைகள் மீது வழக்கு  கோவை, ஜூன் 28- கோவையில் போலி ஒயர் விற்பனை செய்த 4 எலக்ட்ரிக் கல் கடை மீது காப்புரிமை சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் தனியாருக்கு சொந்தமான ஒயர் தயாரிக் கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தி னர் ‘பாலி கேப்’ என்ற பெயரில் எலக்ட்ரிக்கல் ஒயர் தயாரித்து கடைகளுக்கு விநியோகம் செய்து வருகின்ற னர். இந்நிலையில், இந்த நிறுவனத்தின் ‘பாலி கேப் ஒயர்’ என்ற பெயரில் கோவையை சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடைகள் போலியாக விற்பனை செய்து வருவதாக சென்னை நிறுவ னத்திற்கு தெரியவந்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் மணிமாறன் (74) பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீ சார் விசாரித்ததில், பாலி கேப் பெயரை பயன்படுத்தி போலி ஒயர் விற்பனை செய்தது அவிநாசி ரோட்டில் உள்ள குல்தேவி எலக்ட்ரிக்கல்ஸ், மம்தா எலக்ட்ரிக்கல்ஸ், ஸ்ரீ ஹரிஹர சுதன் எலக்ரிக்கல்ஸ், சோமசுந்தரா ரோட்டில் உள்ள ரத்னமணி எலக்ட்ரிக்கல்ஸ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 4 எலக்ட்ரிக்கல் கடைகள் மீதும் காப்புரிமை சட்டத் தில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.