திருப்பூர், ஆக.26- ஊத்துக்குளி அருகே அருந்ததியர் மக்களுக்கான 3 சத விகித உள் ஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று வெற்றி விழா மற்றும் ஸ்தலக் கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற் றது. ஊத்துக்குளி வட்டம், விருமாண்டம்பாளையம் ஊராட்சி, ஒத்தைப் பனைமேடு நால்ரோட்டில் பாஸ்கர் தலைமையில் கூட் டம் நடைபெற்றது. கோவிந்தராஜ் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஆர்.குமார், தாலுகாச் செயலாளர் எஸ்.கே.கொளந்த சாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் சி.கே.கனகராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சரஸ்வதி, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க தாலுகாத் தலைவர் ஆர்.மணி யன், தாலுகாச் செயலாளர் க.பிரகாஷ் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். கிளைச் செயலாளர் விஜயன் நன்றி தெரிவித் தார். கிளை உறுப்பினர்கள் ஏ.கே.மூர்த்தி, பி.செல்வராஜ், ஆர். மூர்த்தி, ஜி.முத்துலட்சுமி உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.