தருமபுரி, நவ.11- தக்காளி கூல் தொழிற் சாலை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பேரவைக் கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் பாலக்கோடு வட்டக்குழு பேரவைக் கூட் டம் பாலக்கோடு பிடிஒ அலு வலக வளாகத்தில் நடைபெற்றது. வட்டக் குழுத் தலைவர் எஸ்.தமிழ்செல்வன் தலைமை வகித்தார். வட்டக்குழு துணைத் தலைவர் அருள்மணி வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் எஸ்.குணசேகரன் பேர வையை துவக்கி வைத்து பேசினார். வட்டக் குழு செயலாளர் மாணிக்கம் வேலை அறிக் கையும், பொருளாளர் ராஜா வரவு-செலவு அறிக்கையும் முன்வைத்தனர். மாநில துணைத் தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்ட தலை வர் எம்.சுருளிநாதன், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட துணைத்தலைவர் சி. காவேரி, மாவட்ட துணைத்தலைவர் பி.எஸ். இளவேனில் ஆகியோர் பேசினர். பாலக்கோடு வட்டத்தில் தொல்லைகாது நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். தக்காளி விளைச்சல் அதிகமாக இருப்பதால் தக்காளி கூல் தொழிற்சாலை அமைக்க வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்திட வேண்டும். அக விலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை தமி ழக அரசு உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த முறை அவுட்சோர்சிங் முறைகளை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் காலிப்பணி யிடங்களை நிரப்பிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.