districts

img

தகிக்கும் வெப்பம்: சீரான குடிநீர் கிடைத்திட வலியுறுத்தல்

தமிழ்நாட்டு முழுவதும் கோடை வெயில்  தற்போது கொளுத்தி வருகிறது. தினந்தோ றும் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 100  டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகி றது. குளுமையான கோவையிலும் 104 டிகிரி  பதிவாகியுள்ளது. இதனால் மதிய நேரத்தில்  பொதுமக்கள் வீட்டிற்குள்ளே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் நாட் களில் வெயில் இன்னும் கூடுதலாக இருக் கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கோடை காலம் துவங்கி உள்ளதால் குடி நீர் தேவையும் அதிகரித்துள்ளது. நாமக்கல்  மாவட்டம், பள்ளிபாளையம், குமாரபாளை யம் பகுதிகளிலுள்ள குளம், குட்டை, ஏரிக ளில் போதிய நீராதாரம் இல்லாததால் விவசா யிகள் தங்கள் விவசாய பணிகளை தற்காலி கமாக நிறுத்தி வைத்துள்ளனர். வாய்க்கால்  நீர்வரத்து உள்ள ஒரு சில இடங்களில் மட் டுமே விவசாய பணிகள் நடைபெறுகிறது. மேலும், குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலை யில், பள்ளிபாளையம் நகராட்சி மற்றும் ஒன்றி யத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேவையான அளவு குடிநீர் இல்லாத நிலை  இருப்பதால், பொதுமக்கள் பாட்டில் கேன் குடிநீர் வாங்குவது மற்றும் தானியங்கி இயந் திரத்தில் கட்டணம் செலுத்தி குடிநீரை பெற்று  செல்வது அதிகரித்துள்ளது. பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகு தியில் 3 இடங்களில் தனியார் அமைப்பின் சார்பில் கட்டணம் செலுத்தி பெறப்படும் குடி நீர் தானியங்கி மையம் செயல்பட்டு வருகி றது. இங்கு சராசரியாக ஒரு தானியங்கி மையத்தில் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட  தண்ணீர் கேன் பாட்டில்கள் 150 முதல் 170  வரை ஒரு நாளைக்கு நீர் பிடித்துச் செல்லப் பட்டு வந்த நிலையில், தற்போது 250 முதல் 300 கேன்கள் வரை பொதுமக்கள் நீரை கட்ட ணம் செலுத்தி பிடித்து செல்வதாக அங்குள்ள  ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த சமூக  ஆர்வலர் ஒருவர் கூறுகையில், பள்ளிபாளை யம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்க ளில் அவ்வப்போது மேம்பாலப் பணிகள் அமைப்பதற்காக, ஊழியர்கள் பணிகளை மேற்கொள்ளும் பொழுது குடிநீர் குழாய் களை உடைத்து விடுகின்றனர். இதன் கார ணமாகவும் தேவைப்படும் இடங்களுக்கு உரிய முறையில் குடிநீர் கிடைக்காத நிலை  ஏற்படுகிறது. காவிரி ஆற்றிலும் சாயக்கழிவு நீர் உள்ளிட்ட கழிவுகள் கலப்பதால் அந்த  நீரையும் குடிக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக வெளியில் காசு கொடுத்து  குடிநீரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  தற்போது ஆவரங்காடு மற்றும் புதன் சந்தை, ஜீவா செட் ஆகிய மூன்று இடங் களில் தானியங்கி இயந்திரத்தின் மூலம் கட்டணம் செலுத்தி குடிநீர் பெற்று செல்லும் இயந்திரங்கள் உள்ளதால் பொதுமக்கள் ஓர ளவு குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கின் றனர். இருந்தபோதிலும் இரவு நேரத்தில் தனி யார் உணவகங்களுக்கு மற்றும் மண்டபங்க ளுக்கு என ஒரு சிலர் பொதுமக்கள் பயன்பாட் டிற்காக குடிநீரை மொத்தமாக 20 முதல் 50  குடிநீர் கேன்களில் பிடித்துச் செல்கின்ற னர். அப்படி பிடித்துச் செல்லப்படும் பெரும் பாலான குடிநீர் கேன்கள் வெளியிடங்க ளுக்கு கூடுதல் விலை வைத்து விற்கப்ப டுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரண மாக ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு குடிநீர் கேன்களை பயன்படுத்துவர்களுக்கு நீர் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. 100  ரூபாய் கட்டணம் செலுத்தினால் 10 கேன்க ளில் நீர் நிரப்பலாம் என்கிற நிலை உள்ளது.  தற்பொழுது 25 லிட்டர் அடங்கிய கேன் தண் ணீர் 35 முதல் 40 ரூபாய் வரை வெளியிடங்க ளில் விற்பனை செய்யபடுவதால், பத்து ரூபாய்க்கே கிடைக்கும் இந்த நீரை பிடித் துச்செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டு கின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளிலும் இதே நிலை இருப்பதாகவே தெரிகி றது. எனவே, கோடை காலம் முடியும் வரை குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்ய வேண் டும். குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் முறைப்படுத்தி வழங்க வேண் டும். எல்லாவற்றையும்விட அருகில் இவ்வ ளவு பெரிய காவிரி ஆறு பள்ளிபாளையம் பகு தியில் ஓடுகிறது. அப்படி இருந்தும் இங்கு  இந்த அளவு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகி றது என்று நினைக்கும்போது கவலையாக உள்ளது. எதிர்வரும் காலங்களை இத்த கைய பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும்  என கேட்டுக்கொண்டார். -பிரபாகரன்