உதகை, பிப்.16- மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என தையல் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட தையல் தொழிலாளர் சங்க 3ஆவது ஆண்டு பேரவை கோத்தகிரி எடச்சேரி ஹாலில் நடைபெற்றது. ஜி.பாலன் தலைமை ஏற்றார். வேலை அறிக்கையை கே. மகேஷ், வரவு-செலவு அறிக்கையை தேவ மணி முன்வைத்தனர். மாநில பொது செய லாளர் ஐடாஹெலன் துவக்கவுரையாற்றி னார். இதில், கோத்தகிரி அரசு மருத்துவமனை யை தரம் உயர்த்த வேண்டும். தையல் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். நலவாரி யத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை முறை யாக மாதந்தோறும் வழங்க வேண்டும். படித்த இளைஞர்களுக்காக கோத்தகிரி பகுதியில் தொழிற்சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. சிஐடியு மாவட்ட செயலாளர் சி.வினோத் நிறைவுரை யாற்றினார். இதைத்தொடர்ந்து பேரவையில், தலைவராக ஜி.பாலன், செயலாளராக என்.சுதாமுருகன், பொருளாளராக ஆர். பாண்டியராஜன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். இதில், சிஐடியு நிர்வாகிகள் கே.மகேஷ், கே.வாசு, கே.வர்கிஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில், ஆர்.பாண்டியராஜன் நன்றி கூறினார். இதில், திரளான தையல் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.