districts

பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாக்கப்பட்ட உணவை உறுதி செய்ய வலியுறுத்தல்

திருப்பூர், அக். 7 - பள்ளிகளில் குழந்தைகளுக்கு சமைத் துத் தரப்படும் உணவு பாதுகாப்பானது என  உறுதி செய்வதுடன், அதன் மாதிரியை மறு  நாள் வரை சேகரித்து வைத்திருக்க வேண்டும்  என்று நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தி உள் ளது. திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூட்ட அறையில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளின் கருத்துக் கேட்புக் கூட்டம்   வியாழக்கிழமை நடைபெற்றது. முதன்மைக்  கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜோசப் தலைமையில் இக்கூட்டம் நடை பெற்றது. நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைதீர்ப்பு விவாதத்தை முன் வைத்து மனுவாகக் கொடுத்தனர். தி கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசி யேசன் தலைவர் காதர்பாட்சா, பொதுசெய லர் கிறிஸ்டோபர், பொருளாளர் சென்னியப் பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளிக் குழந்தைகளுக்கான உணவு சமைத்து பரிமாறுதல் செய்யும்போது பாது காக்கப்பட்ட உணவு என்று உறுதி செய்து அடுத்த நாள் வரை மாதிரி (சேம்பிள்) எடுத்து  வைத்து சான்று செய்ய வேண்டும். பள்ளிக்  குழந்தைகள் மனநிலை சீரடைய இடைவெளி  நேரத்தில் குடிநீர் பருக வாய்ப்பளிக்க வேண் டும். ஆசிரியர்கள் திறன் குறைந்த மாணவர் களை ஊக்குவிக்க உதவ வேண்டும், கொச் சைப்படுத்தி பேசக்கூடாது. திருமுருகன்பூண்டி தொடக்கப்பள்ளி 1954ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் அதன் கட்டமைப்பை மேம்படுத்தி நடுநிலைப் பள்ளித் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண் டனர்.