ஈரோடு, டிச. 6- தட்கோ மூலம் அனைவருக்கும் கடன் வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்க அந்தியூர் தாலுகா மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் அந்தி யூர் தாலுகா மாநாடு தவுட்டுப்பாளையத்தில் தாலுகா தலை வர் கே.குருசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலை வர் ஆர்.விஜயராகவன், செயலாளர் கே.சண்முகவள்ளி ஆகி யோர் சிறப்புரையாற்றினார். சிஐடியு தலைவர் ஆர்.முருகே சன் வாழ்த்தி பேசினார். தகுதியானவர்களுக்கு நில ஆர்ஜிதம் செய்து இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் வீடு கட்ட நிதி ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அரசு கட்டிக் கொடுத்த பழைய வீடுகளைப் பரா மரிக்க ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். தாட்கோ மூலம் அனை வருக்கும் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில், தலைவராக ஜி.செங்கோடன், செயலாளராக ஏ.கே.பழனிச்சாமி, பொருளாளராக கே.குருசாமி உள்ளிட்ட 16 பேர் கொண்ட தாலுகா கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.