districts

img

மாதம் ஒரு முறை குறைதீர்ப்பு கூட்டம் நடத்திடுக

பள்ளிபாளையம், ஜன.30- மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தை மாதம் ஒருமுறை கோட் டாட்சியர் தலைமையில் நடத்த வேண் டும் என மாற்றுத்திறனாளிகள் அமைப் பின் திருச்செங்கோடு தாலுகா மாநாடு வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோட்டில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங் கத்தின் தாலுகா அளவிலான குழு அமைப்பு மாநாடு ஞாயிறன்று நடை பெற்றது. மாநாட்டிற்கு எம்.செந்தில் தலைமை தாங்கினார். சங்க கொடி யினை ஆர்.துரைசாமி ஏற்றி வைத் தார். நாமக்கல் மாவட்ட அமைப்பா ளர் எம்.ஆர்.முருகேசன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.  இதில், நூறுநாள் வேலைத்திட்டத் தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, 4 மணி நேரம் வேலை, முழு சம்பளம் வழங்க வேண்டும் என்பதை வலியு றுத்தி பிப்ரவரி 21 ஆம் தேதி, போராட் டத்தை வலுவாக நடத்துவது எனவும்  ஆட்சியர் தலைமையில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை குறை தீர்ப்பு கூட்டம் நடத்திட வேண்டும். வருவாய் கோட்டாட்சியர் தலைமை யில், மாதம் ஒரு முறை குறை தீர்ப்பு கூட்டம் நடத்திட வேண்டும். அனை வருக்கும் மாதாந்திர உதவித் தொகை முழுமையாக கிடைத்திடும்  வகையில் நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில், தாலுகா தலைவராக ஆர். துரைசாமி, செயலாளராக ஆர்.சக்தி வேல், பொருளாளராக எம்.செந்தில் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்ட னர். மாநாட்டை நிறைவு செய்து மாநி லச் செயலாளர் பி.ராஜேஷ் உரை யாற்றினார். இதில், திரளானோர் பங்கேற்றனர்.