districts

img

திருப்பூர் வடக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் அலுவலர்களை நியமித்து சுணக்கத்தைப் போக்க வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச் 14 - திருப்பூர் வடக்கு வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும்  வாகன ஆய்வாளர்கள் பணியிடங் களை நிரப்பி சுணக்கத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  திருப்பூர் மாவட்ட மோட்டார் ஆட்டோ  மபைல் யூனியன் (சிஐடியு) கோரி யுள்ளது. சி ஐ டி யு மோட்டார் சங்க மாவட்ட  தலைவர் எஸ்.விஸ்வநாதன், மாவட் டச் செயலாளர் ஒய்.அன்பு, பொருளா ளர் சி.அருண், சம்பத் ஆகியோர் புதன்கிழமை கோவையில் மண்டல  போக்குவரத்து இணை ஆணையரை  சந்தித்து கோரிக்கை மனு அளித்த னர். இம்மனுவில் கூறப்பட்டுள்ளதா வது; தொழில் நகரமான திருப்பூரில் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் (ஆர்டிஓ) உடல்  நலக்குறைவு காரணமாக 45 நாட்க ளுக்கு மேலாக மருத்துவ விடுப்பில்  இருப்பதாக தெரிகிறது. அத்துடன்  மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியிடமும் முழுமையாக நிரப்பப்ப டாமல் உள்ளது. இந்த நிலையில் தெற்கு வட்டார ஆர்.டி.ஓ வாரத்தில் இரு நாட்கள் வந்து செல்கிறார். வாகன ஆய்வாளர்களும் கோவை யிலிருந்து அவ்வப்போது வந்து செல் கின்றனர். இதனால் ஓட்டுநர் உரிமம், உரி மம் புதுப்பிப்பு, ஓட்டுநர் பயிற்சி, வாக னப்பதிவு, வாகன தரச் சான்று,  உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் வரக்கூடிய நூற்றுக்க ணக்கான பொதுமக்கள் தங்கள்  பணி நிறைவடையாமல் அலைக்க ழிக்கப்படுகின்றனர். எனவே வடக்கு வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் ஆர்டிஓ மற் றும் வாகன ஆய்வாளர்கள் பணியி டங்களை நிரப்பி சுணக்கம் இல் லாமல் பணிகள் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலி யுறுத்தி கேட்டுக்கொண்டனர்.