உடுமலை, நவ.11- கிராமங்களில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களை கூடு தல் வசதிகளுடன் தரம் உயர்த்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் மற் றும் உடுமலை ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டது. ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத ஆட்சியின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலுகா குழு சார்பில் தாலுகா செயலாளர் ஆர்.வி.வடிவேல் தலைமையில் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்கள் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்த பிரச்சார இயக் கம் நரசிங்காபுரம், மடத்துக்குளம், வேடபட்டி, கணியூர், கடத்தூர், நீலாம்பூர், பாப்பான்குளம், கொமர லிங்கம், ருத்திராபாளையம் மற்றும் கொழுமம் பகுதிகளில் நடைபெற் றது. அதேபோல் உடுமலை ஒன்றி யக்குழு சார்பில் உடுமலை ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜெகதீசன் தலை மையில் ஞாயிறன்று உடுமலை முக் கோணம் பகுதியில் துவங்கிய பிரச்சார இயக்கம் ஆர்.வேலூர், வாளவாடி, சின்னப்பாப்பனூத்து, சாலையூர், கொடிங்கியம் மற்றும் எரிசினம்பட்டி ஊராட்சியில் நிறைவடைந்தது. இந்த பிரச்சார இயக்கத்தில் கிரா மப்புற மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அனைத்து சுகாதார நிலையங்களையும் படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். மடத்துக்குளம் அமரா வதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். மடத்துக்குளத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங் களை திறக்க வேண்டும். ஒன்றிய அரசு மாநிலங்களின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் கொண்டு வந் துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும். அரசு துறையில் காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும். புதிய குற்ற வியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஊரக வேலை திட்டத் திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும். பிஏபி திட்டத்தின்படி கட்ட வேண்டிய நல்லாறு அணையை கட்ட வேண் டும். அமராவதி மற்றும் திருமூர்த்தி அணை பகுதியை மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலமாக மாற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டது. மடத்துக்குளம் தாலுகாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பிரச்சா ரத்தில் தாலுகா செயலாளர் ஆர்.வி. வடிவேல், தாலுகா குழு உறுப்பினர் கள் எம்.எம்.வீரப்பன், வெள்ளி யங்கிரி, ராதா, வேடபட்டி ஈஸ்வரன், கருப்புசாமி மற்றும் சிஐடியு செய லாளர் ஆர்.பன்னீர்செல்வம், விவ சாய தொழிலாளர் சங்கத்தின் செய லாளர் ஆறுமுகம் உட்பட திரளா னோர் கலந்து கொண்டார்கள். அதே போல் உடுமலை ஒன்றி யத்தில் நடைபெற்ற பிரச்சார இயக் கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் உடுமலை ஒன்றியச் செயலா ளர் எஸ்.ஜெகதீசன், மாவட்டக்குழு உறுப்பினர் கி.கனகராஜ், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் தமிழ்தென் றல், அருண்பிரகாஷ், மாசாணி உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண் டார்கள்.