திருப்பூர், ஜன.11 - 34 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு -2 மற்றும் வடக்கு வட்டார போக்கு வரத்து துறையும் இணைந்து புதனன்று வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது ஒருங்கிணைப்பாளர் மோகன்கு மார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக வட்டார போக் குவரத்து அலுவலர் ஜெயதேவ்ராஜ் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார். அவர் பேசுகையில், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் உயிர் பாதுகாப்பிற்காக கண்டிப்பாக தலை கவசம் அணிய வேண்டும், இருவர் மட்டுமே பயணிக்க வேண் டும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கு வது தவறாகும் ஆகையால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட் டுனர் உரிமம் எடுத்துக் கொண்டு வாகனத்தை இயக்க வேண் டும். பெற்றோர்கள் 18 வயதிற்கு குறைவான தங்கள் குழந்தை களை வாகனங்கள் இயக்க அனுமதிக்க கூடாது, பொது மக் களை அச்சுறுத்தும் வகையில் சைலன்சரை மாற்றி அமைக்க கூடாது,
மேலும் தலை கவசத்தில் கேமிரா பொறுத்தி வாகன கங்களை இயக்குவது தவறாகும். நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். அலை பேசியை பயன்படுத்தி வாக னத்தை இயக்குவதால் விபத்துகள் ஏற்படும். ஆகையால் அலைபேசி உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். விபத்து கள் ஏற்படாதவாறு சாலை விதிகளை மதித்து வாகனங்களை இயக்க வேண்டும், என்றார். மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராஜ், மாணவ செயலா ளர்கள் ராஜாபிரபு, பூபதி ராஜா, விக்னேஷ், ராம்குமார் ஆகி யோர் தலைமையில் பொது மக்களுடன் இணைந்து, டெல்லி யில் சாலையில் சாகசம் செய்ய மாட்டேன், சாலை விதிகளுக் குட்பட்டு வாகனங்களை இயக்குவேன், விபத்தில்லா தமிழ் நாட்டை உருவாக்க அரசு சொல்லும் விதிகளை கடைப்பிடிப் பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்விற் கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்தி ருந்தார்.