districts

img

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை நீக்கிடுக

கோவை, ஜன. 12-  இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடினை நீக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக்)  சார்பில் மாநிலம் தழுவிய கவன  ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும். இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடினை நீக்கிட வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களில் காலியாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை உடனே நிரப்பிட  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, கோவை, தொண்டாமுத்தூர், அன்னூர், மேட் டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, வால்பாறை உள்ளிட்ட 14 மையங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், டிட்டோ-ஜாக் கோவை மாவட்ட ஒருங்கி ணைப்பாளரும், தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட் டச் செயலாளருமான ஆர்.தங்க ராஜ், தமிழக தொடக்கப் பள்ளி  ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் அரசு, மற்றும் மாவட்ட நிர்காகிகள் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று, ஈரோடு வட்டா ரக்கல்வி அலுவலகம் மற்றும் பவா னியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழுவின் நிர்வாகிகள் சி.சண்மு கநாதன், தேவராஜ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாவட்டச் செயலாளர் இரா.மணி உள்ளிட்ட பெருந்திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்ட னர்.