திருப்பூர், ஏப்.28- உடுமலை மற்றும் அமராவதி வனப்பகுதி களில் கடுமையான வறட்சி நிலவி வருவதால், யானைகள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட் பட்ட திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல் வேறு வன விலங்குகள் உள்ளன. இந்நிலை யில், கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியில் உள்ள ஓடைகள், ஆறுகள் வறண்டு போயுள்ளன. மேலும், புற்கள் காய்ந்து வன விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு, குடிநீர் தேடி வன விலங்கு கள் வனத்தைவிட்டு கூட்டம் கூட்டமாக வெளி யேறத் தொடங்கியுள்ளன. அதன்படி, தமிழக எல்லைக்குட்பட்ட காமனூத்து, பூங்கன் ஓடை, சரக்குப்பட்டி, ஏழுமலையான் கோவில் வளைவு உள்ளிட்ட பகுதிகளுக்கு யானைகள் வரத்தொடங்கியுள்ளன. குடிநீ ருக்காக உடுமலை - மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணையை நோக்கி யானைகள் படையெடுத்து வருகின்றன. ஆனால், அமராவதி அணையிலும் நீர் இருப்பு குறைந்து காணப்படுவதால், யானைகள் அவதியடைந்து வருகின்றன. உடுமலை மற்றும் அமராவதி வனப்பகு தியில் வனத்துறையினரால் அமைக்கப்பட் டுள்ள தடுப்பணைகளும் வறண்டு காணப்படு கின்றன. இதனால், தண்ணீர் கிடைக்காமல் யானைகள் அலையும் அவல நிலை ஏற் பட்டுள்ளது. இதுகுறித்து உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக அதிகாரிகள் கூறுகையில், வனப்ப குதியில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், தடுப்பணைகளும் வறண்டு போனதால் யானைகள் வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன. தற்போது, அமராவதி அணையை நோக்கி யானைகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. அங்கும் நீர் பற்றாக்குறை உள்ளதால், மழை பெய்தால் மட்டுமே இதற்குத் தீர்வு கிடைக்கும், என்ற னர்.