மாரண்டஅள்ளி ஏரி பகுதியில் யானைகள் தஞ்சம்
தருமபுரி, மார்ச் 19- மாரண்டஹள்ளி அருகே உள்ள பொம்ம னூர் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் ஏரி யில் தஞ்சமடைந்துள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே உள்ள பொம்மனூர் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் விவசாய நிலங் கள் வழியாக ஞாயிறன்று காலை முதலே உலா வந்து கொண்டிருந்தன. இந்த இரண்டு காட்டு யானைகளும் மனிதர்களுக்கோ அல் லது கால்நடைகளுக்கோ எந்தவித தொந்தர வும் செய்யாமல் விவசாய நிலங்கள் வழியாக சென்று கொண்டிருந்தன. அப்பொழுது வனத் துறையினர் யானையை வனப்பகுதிக்கு விரட்டி அடிக்க முயன்றனார். ஆனால், காட்டு யானைகள் பொம்மனூர் பகுதியில் உள்ள ஏரியில் தஞ்சமடைந்து, ஆனந்த குளியல் போட்டு வருகிறது. வனப்பகுதியிலிருந்து கிராமங்களுக் கும், விவசாய நிலங்களுக்கும் வரும் காட்டு யானைகளை மீண்டும் காட்டிற்கு அனுப்ப முடியாமல் வனத்துறையினர் தவித்து வரு கின்றனர். மாவட்ட வன அலுவலர் தலைமை யிலான குழுவினர் யானைகளை கண்காணிப் பதற்கும், அவற்றை மீண்டும் வனத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளாதது, தொடர் யானைகள் இறப் பிற்கும் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற் றஞ்சாட்டியுள்ளனர்.
கோவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
கோவை, மார்ச் 20- கோவை, குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ஜி20 இளம் தூதுவர்கள் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன் றிய இணையமைச்சர் எல்.முருகன், இந்தியாவின் ஜி20 ஷெர்பா அமிதாப் காந்த் ஆகி யோர் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்த னர். அப்போது, ஆளுநர் பேசு கையில், பூமி வெப்பமய மாகி, நதிகள் வறண்டு, வனங் கள் காய்ந்து என பல்வேறு மோதல்கள் மனிதனுக்கும் இயற்கைக்குமான போர் நடந்து வருகிறது. புதிய எலக்ட் ரானிக் உபகரணங்களால் மனிதர்கள் தற்கொலை, மன அழுத்தம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. குறிப்பாக மன உளைச்சல் அதிகளவில் காணப்படுகிறது, என்றார்.
12 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை
சேலம், மார்ச் 19- வாழப்பாடி அருகே 12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பெத்த நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவ ருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், நாகராஜ் மற்றும் அவரது மனைவி குடும்ப சூழ்நிலை காரண மாக மும்பையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலை யில், நாகராஜின் மகன் விஷ்வா பெத்தநாயக்கன்பாளை யத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி, பேளூர் அர சுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இரண்டு பாடத் தேர்வுகள் எழுதியுள்ள நிலையில், ஞாயிறன்று விடுமுறை என்பதால் விஷ்வா செக்கடிப்பட்டியில் உள்ள தாத்தா வீட் டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் உள்ள தனி அறையில் விஷ்வா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைக்கண்ட அவரது தாத்தாவும், பாட்டியும் கூச்சலிடவே அக்கம் பக்கத்தி னர் உடனடியாக அங்கு சென்று பார்க்கும் போது மாணவன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஏத்தாப்பூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து, மாணவனின் உடலை கைப்பற்றி வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதன்பின் மாணவனின் உடல் சேலம் அரசு மருத்துவம னைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூண்டு வைத்து குரங்குகள் பிடிப்பு
ஈரோடு, மார்ச் 20- சென்னிமலை வனப்பகு தியிலிருந்த குரங்குகள் உணவு தேடி நகர பகுதிக்கு வந்து விட்டன. வீட்டு மாடி களில் காய வைத்திருக்கும் உணவு பொருட்களை சாப்பி டுவது, குழந்தைகள் மற்றும் பெண்களை அச்சுறுத்துவது அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர். எனவே, இடை யூறு ஏற்படுத்தி வரும் குரங்கு களை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இத னைத்தொடர்ந்து சென்னி மலை நகர பகுதிகளில் உலா வரும் குரங்குகளை வனத் துறையினர் கூண்டுகள் வைத்து பிடித்தனர்.
கொண்டத்து காளியம்மன் கோவில் திருவிழா: கடைகளை நேரடியாக ஒதுக்க கோரிக்கை
திருப்பூர் மார்ச் 20 - பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் திரு விழாவையொட்டி கடைகளை பொது ஏலம் விடாமல் அறநி லையத் துறை சார்பாக நேரடியாக வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருமாநல்லூர் பகுதி கிளை செயலாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த் திருவிழா வரும் மார்ச் 29 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலைதுறை சார்பில் நிர்வகிக்கப்படும் இக்கோவில் திருவிழாவை யொட்டி, கடைகளை ஒட்டுமொத்தமாக ஏலம் விட முடிவு செய்துள்ள னர். இதன்மூலம் தனிநபர்கள் மறைமுக கூட்டணி (சிண்டி கேட்) அமைத்து வியாபாரிகளுக்கு கடையை அதிக வாட கைக்கு விட முயற்சிக்கின்றனர். தனிநபர்களிடம் இருந்து அதிக வாடகைக்கு கடையை வாங்கும் வியாபாரிகள் பொருட் களின் விலையை அதிகரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. எனவே பொது ஏலம் விடும் முறையை ரத்து செய்து இந்து சமய அறநிலையத் துறையே நேரடியாக கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதன் மூலம் கோவில் நிர்வாகத்திற்கு நேரடியாக வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
விலை கொடுத்து குடிநீர் வாங்கும் அவலம் குடிநீர் வழங்க சிபிஎம் கோரிக்கை
திருப்பூர், மார்ச் 20- பொங்குபாளையம் ஊராட்சியில் ரூ.2 விலைக்கு ஒரு குடம் குடிநீர் வாங்க வேண்டிய நிலை இருப்பதால் குடிநீர் பிரச்சனையைப் போக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று குறைதீர் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொங்குபா ளையம் கிளை செயலாளர் எஸ்.அப்புசாமி அளித்த மனுவில், பரமசிவம்பாளையம் பகுதிக்கு 15 நாட்களுக்கு மேலாக குடி நீர் வழங்கப்படவில்லை. இதேபோல் பொங்குபாளையம், காளம்பாளையம் பகுதிகளுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை கூட குடிநீர் வழங்குவதில்லை.இங்கு புலம் பெயர்ந்த தொழி லாளர்கள் 7000க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்ற னர். போதிய குடிநீர் கிடைக்காததால், ஒரு குடம் தண்ணீர் ரூ.2 என விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. அரசுப் போக்குவரத்து திருப்பூர் கிளை 1லிருந்து இயக்கப்ப டும் 27எ/3ஜி நகர பேருந்து, மகளிருக்கு இலவசம் என்று அறிவித்ததில் இருந்து வாரம் 3 நாட்கள் கூட இயக்குவ தில்லை. இப்பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
நகர்புறங்களில் சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க செயற்கை கூடு
திருப்பூர், மார்ச் 20 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்ப ணித் திட்டம் அலகு-2 சார்பாக திங்களன்று கல்லூரி வளாகத் தில் உலக சிட்டுக்குருவிகள் தின கருத்தரங்கு மற்றும் உறுதி மொழி நிகழ்வு நடைபெற்றது. உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப் பட்ட இந்நிகழ்வில், நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங் கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலையில் கல்லூரி முதல் வர் கிருஷ்ணன் தலைமை ஏற்றார். திருப்பூர் இயற்கை கழக பிரதிநிதி ராம்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை காக்க உலகம் முழுவதும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது, டெல்லி அரசு சிட்டுகுருவியை தங்களது மாநில பறவையாக அறிவித்துள்ளது, உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் ஒரு சிறிய பறவை, கோடை காலங்களில் பறவை களுக்கு தினமும் தண்ணீர் வைக்க வேண்டும், குருவிகளுக்கு தண்ணீர் வைப்பது பெருமையல்ல. அது நம்முடைய கடமை, மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும், பறவைகள் இல் லாமல் மனிதர்களால் வாழ முடியாது எனறு கூறி, சிட்டுக்குரு விகளை பாதுகாப்பதற்காக செயற்கை முறையில் கூட்டை எப்படி உருவாக்க வேண்டும், அதன் அளவுகளை எவ்வாறு கணக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார். பிறகு, பறவை ஆர்வலர் கீதாமணி, கார்த்திகையன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாணவர் செயலர்கள் சுந்தரம், பூபதி ராஜா, ரமேஷ், மதுகார்த்திக் ஆகியோர் தலைமையில் 55 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, சிட்டுக்குருவி தினத்தன்று அனைவரும் சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு: ஆட்சியரிடம் சிஐடியு கோரிக்கை மனு
திருப்பூர், மார்ச் 20 – திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) மாவட்ட ஆட் சியரிடம் கோரிக்கை மனு வழங்கி யுள்ளது. திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழி யர் சங்கத் தலைவர் எம்.ஆறுமுகம், செயலாளர் ஒய்.அன்பு உள்ளிட்டோர் திங்களன்று அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் ஏறக்கு றைய 250 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடை மேற் பார்வையாளர், விற்பனையாளர், உத வியாளர் என ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர் கள் கணக்கு முடித்து, பணி முடித்து வீட் டுக்குச் செல்வது இரவு 11 மணிக்கு மேலாகிறது. இந்த சூழலை பயன்ப டுத்தி சில சமூக விரோதிகள் டாஸ்மாக் விற்பனை பணத்தை ஊழியர்களிடம் கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபடு கின்றனர். இதனால் பல பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். சென்னையைத் தவிர மற்ற மாவட் டங்களில் விற்பனை பணத்தை இரவு நேரம் மேற்பார்வையாளர், விற்பனை யாளர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பில் வைத்திருந்து மறு நாள் காலை வங்கி யில் செலுத்தும் நிலை உள்ளது. இது குறித்து பல முறை மனுக் கொடுத்து முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 18ஆம் தேதி கொடுவாய் கடை எண் 3879இல் மேற்பார்வையா ளர் உக்கிரபாண்டி மற்றும் கடை விற்ப னையாளர்கள் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின் றனர். இது குறித்து ஊதியூர் போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது போன்று ஊழியர்கள் மீது தாக் குதல் நடைபெறும்போது டாஸ்மாக் நிர்வாகம் போதிய கவனம் செலுத்தா மல், உரிய சட்ட நடவடிக்கை மேற் கொள்ளாமல் அக்கறையற்ற நிலையில் உள்ளது. எனவே ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பும், விற்பனைத் தொகையை பாதுகாப்பாக வங்கியில் செலுத்த ஏற்பாடும் செய்ய வேண்டும் என சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
தாய், மகள் ரயிலில் பாய்ந்து தற்கொலை
திருப்பூர், மார்ச் 20 – திருப்பூர் மாவட்டம், சாம ளாபுரம், பள்ளிபாளையம் அருகே பரமசிவம்பாளை யத்தைச் சேர்ந்தவர் சரவ ணன். விசைத்தறி உரிமையா ளர். இவரது மனைவி தன லட்சுமி (39). மகள் ரக்சனா (17). பிளஸ் 1 படித்து வந் தார். இந்த நிலையில் சரவண னுக்கு முதுகில் தண்டுவட பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்தார். விசைத்தறி தொழிலும் முன்பு போல் இல்லாமல் வருவாய் தராத தால், குடும்பத்தினர் வேத னையில் இருந்தனர். வங்கி யில் பெற்ற கடனுக்கு தவ ணைத்தொகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் குடும்பத்தார் மன உளைச்சலில் இருந்த தாக தெரிகிறது. இந்நிலை யில் ஞாயிறன்று அதி காலை சோமனூர் ரயில் நிலையம் அருகே தன லட்சுமி மற்றும் ரக்சனா இரு வரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண் டனர். இதையடுத்து அப்பகு தியினர் அளித்த தகவலின் பேரில் திருப்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலங் களை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் கூறி யதாவது: சரவணனுக்கு உடல் நிலை சரி இல்லாத தால், விரக்தியான மனநிலை யில் இருந்ததால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய் துள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
இஎம்எஸ் நினைவு நாள்
திருப்பூர், மார்ச் 20- மார்க்சிய ஆசான் இஎம்எஸ் நினைவு நாளை முன்னிட்டு, ஞாயிறன்று வேலம்பாளையம் ஏ கிளை சார்பில், அவரது உருவப் படத்துக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் மூத்த தலைவர் வி. பி.சுப்பிரமணியம், நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நகரக்குழு உறுப்பினர் த. நாகராஜன், கிளைச் செய லாளர் வி.வெள்ளிங்கிரி, சிஐ டியு பனியன் சங்க ஏரியா கமிட்டி தலைவர் எம்.பாண் டியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:41.76/60அடி நீர்வரத்து:813கன அடி
வெளியேற்றம்:119கனஅடி
அமராவதி அணை நீர்மட்டம்:52.00/90அடி.நீர்வரத்து:111கனஅடி
வெளியேற்றம்:111கனஅடி
வாயில் காயமடைந்த பெண் யானை உயிரிழப்பு
கோவை, மார்ச் 20- வரகளியாறு முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த, வாயில் காயத்துடன் பிடிபட்ட பெண் யானை ஞாயிறன்று இரவு உயிரிழந்தது. கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள ஆதி மாதையனூர், முத்துக்கல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாயில் காயத்துடன் உடல் மெலிந்த நிலையில் பெண் காட்டுயானை ஒன்று சுற்றித் திரிந்தது. அது விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப் படுத்தி வந்ததோடு பொதுமக்களையும் விரட்டி வந்தது. இத னால் அந்த காட்டுயானையை பிடித்து சிகிச்சை அளித்து, வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கோழிகமுத்தி முகா மிலிருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப் பட்டு, கடந்த மார்ச் 17 ஆம் தேதியன்று மயக்க ஊசி செலுத்தி அந்த காட்டுயானை பிடிக்கப்பட்டது. தொடர்ந்து லாரியில் ஏற்றி வரகளியாறு முகாமுக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். அங்குள்ள மரக்கூண்டில் யானையை அடைத்து, கால்நடை மருத்துவர்கள் மனோகரன், விஜயராகவன், சுகுமா ரன் ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வந்த னர். யானையின் நாக்கில் காயம் இருந்ததால் பசுந்தீவனம் எடுத்துக்கொள்ள முடியாமல் சிரமமடைந்தது. எனினும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு, நோய் தடுப்பு மருந்துகளும் வழங்கப்பட்டு வந்தது. ஆனாலும் யானையின் உடல் நிலை யில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், ஞாயிறன்று இரவு பரிதாபமாக உயிரிழந்தது.
மறு சுழற்சிக்கு கொண்டு செல்லப்பட்ட பிளாஸ்டிக்குகள்
உதகை, மார்ச் 20- தமிழக - கர்நாடகா எல்லை சோதனைச் சாவடியில் கைப் பற்றிய தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிளாஸ்டிக் பொருட் களை நீலகிரி மாவட்டத்திற்குள் எடுத்து வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட் களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தி லுள்ள அனைத்து சோதனை சாவடிகளில் வழியாக வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் சோதனை நடை பெறுகிறது. இந்நிலையில், தமிழக - கர்நாடகா எல்லையான கக்கநல்லா சோதனைச் சாவடியில் கேரளா மற்றும் கர்நாடகா விற்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இத னால் கக்கநல்லா சோதனை சாவடியில் வாகனங்களில் எடுத்து வரப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குளிர் பானங்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட அனைத்து வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சேக ரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட சுமார் 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை கூட லூர் வட்டாட்சியர் பார்வையிட்டு, அதனை மறு சுழற்சிக் காக அதிகாரிகள் வாகனம் மூலம் எடுத்து சென்றனர். மேலும் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு பிளாஸ் டிக் பொருட்களை நீலகிரி மாவட்டத்திற்குள் எடுத்து வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.
200 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
தருமபுரி, மார்ச் 20- தருமபுரி நகரில் குடிநீர் கட்டணம் செலுத்தாத 200 இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர். தருமபுரி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்கள் மற்றும் குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் பணியில் நக ராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் தலைமையில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் 86 சதவிகி தம் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணம் 40 சதவிகிதம் தான் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதனால் குடி நீர் கட்டணம் ரூ.2.52 கோடி வசூலிக்க முடியாமல் நிலுவை யில் உள்ளது. இந்த குடிநீர் கட்டணங்களை வசூலிக்க நக ராட்சி பணியாளர்கள் முதல் ஆணையர் வரை தினமும் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்று கிழமை விடுமுறை நாட்களிலும் வரி வசூலிப்பில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நகராட்சிக்கு குடி நீர் கட்டணம் செலுத்த முன்வராத நபர்களின் குடிநீ்ர் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் குடிநீர் கட்டணம் வசூலிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு குடிநீர் கட்டணம் செலுத்தாத 200 இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க உடனடியாக குடிநீர் கட்டணத்தை நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி மையத் தில் செலுத்தி உரிய ரசீது பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது என்று நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் தெரி வித்துள்ளார்.
சீரான குடிநீர் விநியோகம் கேட்டு பொதுமக்கள் முற்றுகை
கோவை, மார்ச் 20- பொள்ளாச்சி அருகே முறையாக குடிநீர் விநியோகம் வழங்கப்பட வில்லை என குற்றஞ்சாட்டி, பொதுமக் ள் குடிநீர் வடிகால் வாரிய அலுவல கத்தை முற்றுகையிட்டனர். பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி ஊராட்சியில், சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 20 ஆயிரத் திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இத னால், பொதுமக்கள் குடிநீரின்றி பல் வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின் றனர். அதிகாரிகளிடம் தொடர்ந்து முறை யிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இந்நிலையில், திங்களன்று ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொது மக்கள் பொள்ளாச்சி மகாலிங்கபுரத் தில் செயல்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட குடிநீர் வடிகால் வாரிய அலுவல கத்தை முற்றியிட்டு மனு அளிக்க வந்த தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைய டுத்து அதிகாரிகள் பொதுமக்களை சமா தானப்படுத்தி, முறையாக குடிநீர் விநி யோகம் செய்வதாக உறுதியளித்தனர்.
வளர்ப்பு தந்தை பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்
சேலம், மார்ச் 20- பொது தேர்வுக்கு படிக்க விடாமல் பாலியல் தொந்தரவு தரும் வளர்ப்பு தந்தை உள்ளிட்ட இருவர் மீது நடவ டிக்கை எடுக்க கோரி சிறுமி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம், கோரிமேடு, சின்ன கொல்ல பட்டி பகுதியை சேர்ந்த சிறுமி மற்றும் அவரது மாமா இருவரும் திங்களன்று மாநகர காவல் ஆணையாளர் அலுவ லகத்தில் புகார் அளித்தனர். இதுகு றித்து அவர்கள் கூறுகையில், நான் அனாதை இல்லத்தில் இருந்தபோது சிறுவயதிலேயே என்னை சண்முகம் தத்து எடுத்தார். கடந்த இரண்டு ஆண்டு காலமாக வளர்ப்பு தந்தையான சண் முகம், வீட்டில் குடியிருக்கும் மணி என்ப வரும் தினந்தோறும் மது அருந்திவிட்டு என்னிடம் தகாத வார்த்தையில் பேசியும் பாலியல் தொந்தரவு தருகிறார். இவர் கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கன் னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் அதிமுக கட்சியை சேர்ந்த வர்கள் என்பதால் புகாரை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வரும் வேளையில் எனக்கு சரிவர உணவு வழங்காமல் மது அருந்தி விட்டு பாலியல் தொந்தரவு செய்வதால் என்னால் சரிவர படிக்க முடியாமல் தவித்து வருகிறேன். எனவே உரிய நடவ டிக்கை எடுத்து எனக்கு வசிப்பதற்கும் படிப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீர் திறப்பு
தருமபுரி, மார்ச் 20- தருமபுரி, துலம்லஅள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து விவ சாயிகள் பயன்பெறும் வகை யில், 35 நாட்களுக்கு மொத் தம் 89.30 மில்லியன் கன அடி தண்ணீர் 5 நாட்களுக்கு திறந்து விடப்பட உள்ளது. 5 நாட்களுக்கு தண்ணீரை நிறுத்தியும் முறை வைத்து திறந்து விடப்படவுள்ளது. இதன்மூலம் காரிமங்கலம், அடிலம் சுற்றுவட்டார கிரா மங்களிலுள்ள 2184 ஏக்கர் விளை நிலம் பயன்பெறும். கோடை காலம் துவங்கி யுள்ள நிலையில் இருக்கின்ற நீரை சிக்கனமாக பயன்ப டுத்தி விவசாயி பெருங்குடி மக்கள் பயன்பெற வேண்டு மென ஆட்சியர் தெரிவித்துள் ளார்.