districts

img

கொல்லிமலையில் மின்சார வாகனம்

நாமக்கல், ஜூன் 26-  கொல்லிமலையில் சுற்றுலாப் பயனிகளின் வசதிக்காக மின்சார வாகன சேவை துவக்கப்பட்டுள்ளது. இது பயணி களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் அடுத்துள்ள கொல்லிமலை சுற்றுலாத் தலமாக உள்ளது. இந்த மலைக்கு வார விடுமுறை நாட்கள் மட்டும் அல்லாமல் மற்ற நாட்களி லும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணி களின் வசதிக்காக, ஆகாயகங்கை சூழல் சுற்றுலாக் குழுவின் மூலம், அரப்பளீஸ்வரர் கோயிலில் இருந்து எட்டிக்கை யம்மன் கோயில் வரை செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக் காக ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுற்றுலா மின்சார வாகன சேவை துவக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து அரப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து  மாசிலா அருவி வழியாக சுற்றுலாப் பயணிகள், முதியவர்க ளின் வசதிக்காக எட்டிக்கையம்மன் கோயில் வரை 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு தினமும் செவ்வாயன்று முதல் இயக்கப் பட்டு வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.